Sunday, February 27, 2011

#கிளிநொச்சியில் மது பானத் தொழிற்சாலை

கிளிநொச்சியில் மது பானத் தொழிற்சாலை .! #அய்யா ராஜபட்சே ! நீதான்யா நிஜமாவே டாக்டர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு !

விளம்பரப் படத்தில் முன்பு கலைஞருக்கு ஆனந்தி கடிதம் எழுதினாள். இப்போது அருட்செல்வன் எழுதுகிறான் காரியம் ஆகிறதா என்று பார்க்காமல் கடிதம் மட்டுமே எழுதி , கருணை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் கயவாளித்தனம் அடுத்த தலைமுறைக்கும் வந்து விடுமோ ?

#நாலாந்தர பேருக்கு நன்றி





பார்வதி அம்மாள் எனும்
தாயின் உடலோடு
நாய்களின் நிணங்களைப்
போட்டு எரித்துள்ளனர்
சில இலங்கைக் காடையர்கள் .

நன்றி .!

நல்ல வேளை....
பன்றிகளின் பிணங்களோடு
சிங்களப் 'பன்றி'களின்
பிணங்களோடு
சேர்த்து எரிக்கவில்லையே !

Wednesday, February 23, 2011

# கலைஞர் கருணாநிதி வருத்தம் நியாயமா தலீவா?




காங்கிரஸ் என்னை முப்பது ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லப் பார்க்கிறது --- முதல்வர் கலைஞர் கருணாநிதி வருத்தம் .#
அதே காங்கிரசோட சேர்ந்து நீங்க
ஈழத் தமிழினத்தை
மூவாயிரம் ஆண்டுகள்
பின்னோக்கி கொண்டு போனது மட்டும்
நியாயமா தலீவா?

Saturday, February 19, 2011

#எங்கேயடா புதைப்ப்பீர்கள் ?








ஒரு
தியாகத்தின் திருக்கடல்
ஒரே 'மூச்சில்'
குடிக்கப் பட்டிருக்கிறது .

எத்தனையோ
வீரத்தாய்கள்
இறந்த இதே பூமியில் ,
முதன் முதலாய்
மறைந்திருக்கிறது ...
வீரத்தின் தாய் .

வெறுப்பை எதிர்கொண்டே
இருப்பை தொடர்ந்த
ஒரு இனத்தின் மண்ணில் ...

அம்மா!

நீ மட்டும்
நெருப்பை சுமந்த
கருப்பை .
இனமானம் வளர்த்த
திருப்பை.

அடேய்...

எங்கே.....
எப்படியடா
புதைப்பீர்கள் ,
இணையில்லா அந்தச்
சிறப்பை ?

நாற்காலிகளுக்கெனப்
பிள்ளை பெறும்
நாடிருக்கும் இனத்தில் ,
நீ மட்டுமே
சமருக்கென
சந்ததி வளர்த்தவள்!
படைக் களத்துக்கென
பாரம் சுமந்தவள் !

என்னை மன்னித்து விடு
தாயே . !

சொக்கத் தங்கத்துக்கு
சோப்பு போட்டே
கைகள் தேய்ந்து போன
கயவர்கள் நிறைந்த மண்ணில் ...

வடக்கே இருந்து
ஜிப்பா போட்டுக்கொண்டு
எக்குத்தப்பான நடையோடு
எவன் வந்தாலும்,
கை குலுக்குவதிலேயே
காவியப் பெருமை பெறும்
கசடுகள் நிறைந்த நிலத்தில் ....

முன்னூறு ரூபாய்க்கு
வாக்குச் சீட்டை வைத்து
விபச்சாரம் செய்து விட்டு ,
மூவாயிரம் கொடுத்தால்
யாரை வைத்து
விபச்சாரம் செய்யலாம் என,
வீட்டுப் பெண்களை
விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கிற
விகாரர்கள் நிறைந்த
ஒரு சமூகத்தில் ...

காலைக் கழுவிக் குடிப்பதையே
கதை கவிதை இலக்கியம்
என்று சொல்லி
ஓக்காலிக்க் வைக்கிற
ஒரு கும்பல்,
விருது பெறும் எருதுகளாக
பல்லிளிக்கும்
ஒரு பாழும் சூழலில்

இருந்துகொண்டு ....

உனக்காக
ஒரு துளி கண்ணீர்
விடுவதைத் தவிர
எதுவும் செய்ய முடியவில்லை
என்னால்.


குண்டு வைத்துக்
கொத்துக் கொத்தாய்
கொன்று போடும்
கொலைகாரத தீவிரவாதக்
கூட்டத்தில்
பிறந்தவர்களுக்கும்....
தீவிரமாய் சிகிச்சை அளித்து
திருப்பி அனுப்பும்
அஹிம்சை தேசம்

ஒரு
கிழவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்து ..

இதோ !
கிழிந்து கிடக்கிறது .

சிகிச்சை அளிக்க மறுத்த
அதே தேசம்
பிச்சை போடுவது போல
பிறகு அழைக்கையில் ....

மறுத்த போது
அந்தப் பெண்மையின் வீரம்
திசைகளைக் கிழித்தது.

பார்வதி அம்மாளைப்
புதைப்பவர்களே !

கூடவே இன்னொரு
குழி வெட்டுங்கள் .

புதைப்பதற்கு
இன்னொரு உடலைத் தேடாதீர்கள் .

இருக்கவே இருக்கிறது ...
இந்தியாவின் காந்தீயம்!




Tuesday, February 15, 2011

# நான் படித்தேன், குரும்பலூரில் நேற்று !





நான் படித்தேன், குரும்பலூரில் நேற்று !
**************************************

ஞாபகக் கூட்டின் உள்ளே நுழைந்து
நாலா புறமும் தேடித் பார்த்தால்
கையில் கிடைக்கும் காவியப் பொன்னேடுகள் - நம்
பள்ளியின் பெயர் சொல்லியே பளபளக்கின்றன

அரசு உயர்நிலைப் பள்ளி, குரும்பலூர்...
அது ,

ஆயிரம் கல்விக் கடவுள்கள் ஒன்றாக வசித்த இடம் .
வாழ்க்கைத் தேரை வளமையாய் இழுக்க
எங்களுக்கு கிடைத்த இணையற்ற வடம் .
இதயத்தின் கண்களும் அறிவின் காதுகளும்
ஒருசேர விழித்த உன்னத பீடம் !

சாலையின் மேலே பள்ளி --அந்த
பள்ளியே எங்கள் சோலை .

விரும்பிப் படித்த ஒரு தலைமுறையின்
விளக்குகளாய் ஒளிர்ந்த எங்கள் ஆசிரியர்கள் !

பள்ளிப் பாடத்தோடு லட்சியப் பாடத்தையும்
பக்குவமாய்ச் சொன்ன சின்னாப் பிள்ளை அய்யா.
அடியைக் கூட அன்போடு கொடுக்கும்
அற்புதம் அறிந்தவை அவரது கரங்கள் !

விஞ்ஞானியாக வேண்டியவன் என்றென்னை வாழ்த்தி
விழிகளை விரிய வைத்த ரெஜினா மேரி டீச்சர்
(என்னை மன்னியுங்கள் டீச்சர் )

பாஞ்சாலி சபதத்தை பாங்காக நடத்தி
படிக்காமலேயே மனப்பாடமாக்கிய யூசுப் அய்யா !

இயற்றமிழோடு இசைத்தமிழ் சேர்த்து
இன்பத் தமிழ் ஊற்றிய நக்கசேலம் தமிழய்யா !

கணீர்க் குரலில் பாடம் நடத்திய சொக்கநாதபுரம் அய்யா
சீறும் குரலில் பாடம் நடத்திய சின்னராணி டீச்சர்
(யப்பபபா ... உங்கள் அடி !. முதுகு இன்னும் வலிக்கிறது டீச்சர் )

கணிதப் பாடத்தை காதலிக்க வைத்த ஈ.பெரியசாமி அய்யா
உடற் பயிற்சியின் உன்னதம் அறிமுகப் படுத்திய அழகன் அய்யா ....

ஒரு பக்கம் பத்திரிகையாளன் மறுபக்கம் வரலாறு ஆசிரியர் என
நான் கண்ட முதல் பத்திரிக்கையாளர், தினமலர் சேதுராமன் அய்யா ...

அறிவியல் பாடத்தோடு அன்பியலும் புகட்டி
ஆல விழுதாய் மனதில் ஆழ விழுதாய் இறங்கி -- நான்
பத்தாவது அறிவியல் தேர்வு எழுதிச் சென்ற மதியம்
பஸ் நிறுத்தத்தில் பசியோடு காத்திருந்து ....
எங்கோ இருந்த என்னை பர்ர்க்க
எல்லா புறமும் ஆளனுப்பி வரவழைத்து .....
அறிவியல் தேர்வை நான் எழுதிய விதம் அறிய
வினாத்தாள் கேள்விகள் கேட்டு விடை சொல்ல வைத்து
திருப்தியையே உணவாக உண்டு பஸ் ஏறி ....
இமயம் போலென் மனதில் ஏறிய எம் .தர்மலிங்கம் அய்யா ..

படிக்கப் போகும் குழந்தையை கை பிடித்து
பள்ளி வாகனத்தில் ஏற்றி விடும் அம்மா போல
எனக்குள் இருந்த படைப்புத் திறமைக்கு
இனிப்பாய் ஆரம்ப அங்கீகாரங்கள் தந்து
வீட்டுக்குள் வரவழைத்து விழிகள் விரியப் பேசி
தோளில் கை போட்டு தோழமை காட்டி ,
படுத்துக் கிடப்பது போல் படித்துக் கிடக்கவும் பழக்கப்படுத்தி ,

மகன்களைக் கண்டிக்கும் கோப வேளைகளில்
"ஒரு பயலும் உங்கள பாக்க வீட்டுக்குள் வரக் கூடாது " என
ஓங்காரத்தின் உயரத்தில் நின்று முழங்கும் போதும்
"செந்திலைத் தவிர ..." என்று உடனே சேர்த்து ......

எனக்கு மட்டும் கணையாழி தந்த எத்திராஜ் அய்யா ....

அடேயப்பா ..!

அண்ணன்களையும் அக்காக்களையும்
அத்தைகளையும் மாமாக்களையும்
ஆசிரியச் செல்வங்களாய்ப் பெற்ற
அதிர்ஷ்டக்காரர்களப்பா நாங்கள் !

என் அரைக்கால் சட்டையை கணுக்கால் வரை
இழுத்து விட்டது இந்தப் பள்ளிதான் !.
டேய் என்று அழைக்கப் பட்டவன்
தம்பி என்று அழைக்கப் பட்டதும் இங்கேதான் .

எனக்கு மீசை முளைத்ததை எனக்கும் முன்பே
கண்டு பிடித்த தோழிகள் இங்கேதான் பூத்தார்கள் .

மணிக்கட்டுக் கையை மணிக்கொருதரம் பற்றி
நட்பின் உரம் ஏற்றிய நண்பர்கள்
இந்தப் பள்ளியில்தான் விளைந்தார்கள்.

சைக்கிளை விட நீளமான அலங்காரவல்லி
சைக்கிள் ஓட்டும் அதிசயம் இங்கேதான் கண்டேன் .

நான் செய்த தவறை நான் இல்லா வேளையில்
தான் செய்த தவறாய் தகைமையுடன் ஏற்று
ஐம்பது மூங்கில் அடிகளை அசராமல் வாங்கி ,
நட்புக்கு இலக்கணம் வகுத்த நாகமுத்து ...
இந்தப் பள்ளியில்தான் எனக்குக் கிடைத்தான் .

வறுமையையே உணவாய்த் தின்று
வாடிக் கிடந்த பொழுதுகளிலும் -- ஒரு
மைசூர் பாக்கு நான் தந்தாலும்
மறுத்துப் பழகிய ரவீந்திரனை
இங்கேதான் பார்தது
இதயம் வணங்கி நின்றேன் . .

ஒரு கோபத்தில் அறிமுகமாகி பின்
ஓர் உடன் பிறந்தவளாகவே மாறி
ஒரு நாள் .....
சொல்லாமல் செத்துப் போன பாளையம் சாரதாவுகாக
நான் கண்ணீர் விட்டுக் கரைந்தழுததற்குக்
காரணமானதும் இந்தப் பள்ளிதான் .

அறிவில் மட்டுமின்றி அன்பிலும் அவசரம் காட்டும்
நல்ல நண்பன் 'வாலு ' சரவணன் ...
இந்தப் பள்ளி இல்லாவிட்டால்
என்னோடு இயைந்திருப்பானா?

ஊட்டியில் இருந்து வந்த உற்சாக வைரமணி
நீலகியில் இருந்து வந்த நேரிய வீரமுத்து
காற்றில் பறந்து விடுவாளோ என்று
கவலைப் பட வைத்த விஜயலட்சுமி

கழுத்தை உடலுக்குள் புதைத்து நடக்கும் கருப்பு மணிமேகலை ....
குனிந்தபடி சிரித்து நிமிர்ந்தபடி மறைக்கும் குண்டு மணிமேகலை.....
வியர்க்க வியர்க்க சிரித்து கிடந்து -- மணமானபின்
விபத்தில் சிக்கி செத்துப் போன விமலா தேவி
விரிந்த காலில் நடக்கும் மார்ட்டின்

தன் காதுக்கு மட்டும் பேசிக் கொள்கிற சகாய மேரி
பூமிப் பந்தையே அலட்சியமாயப் பார்த்த சகாய ராஜ்
தஞ்சாவூர் பொம்மை போல தலையாட்டும் கலைவாணி
அதிர்ந்து பேசவே தெரியாத அன்புச் செல்வி

வீட்டருகே வீடிருக்க வெகு காலம் உடன் நடந்த
புஷ்பராஜ் , கனகராஜ் , கந்தன் , முருகேசன் .....
நாகேஷ் போல நடித்துப் பேசுவதை
வழக்கமாகவே ஆக்கிக் கொண்ட தெப்பகுளம் ரவி ......

என் முன்னால் வாழ்வில் செத்தவர்கள் ...

என்னையே கொஞ்ச காலம் சாகடித்தவர்கள் ...

எல்லோரையும் எனக்குத் தந்த பள்ளி இதுதான் .

பத்தாம் வகுப்பில் நான் முதல் மதிப்பெண் பெற்றபோது
பாராட்டக் கூச்சப் பட்டு பேசாமல் நின்ற
பக்கத்து வகுப்பு மாணவிகள் பற்றி
இப்போதைய மாணவிகளே! நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள் .

கன்யாகுமரி ஊரின் கரம் பிடித்து நான்
ஆறாம் வகுப்பில் ஆங்கிலப் பேச்சுப் போட்டியில்
அசத்தியது இங்கேதான் .

சுயமாய் எழுதி தமிழ்ப் பேச்சுப் போட்டியில்
நானாக வென்று நாயகனானதும் இங்கேதான் .

ஆண்டு விழா நாடகத்தில் குடுமி வைத்த அய்யராய் ....
அரசுக் கல்வி அலுவலர்கள் முன் ஆடிப் பாடும் பையனாய்
கொடிகாத்த குமரனாய் ....குவலய மாமன்னனாய்
ஒதேல்லோவாய் ....ஜூலியஸ் சீசராய்....
நான் கூடு விட்டுக் கூடு பாய்ந்த
காலங்கள்தான் மறக்குமோ ?

ஆங்கில எழுத்துக்களை அவசரமாய்க் சொல்லி வருகையில்
உயிர் எழுத்துக்கள் வரும்போது மட்டும்
"வெற்றி" என்று சொல்லும் போட்டியில் ,
ஆறு முதல் பத்து வரை நான்
அத்தனை மாணவர்களையும் தோற்கடித்து
சின்னாப் பிள்ளை ஐயாவிடம் சில்லென்ற முத்தம் பெற்று ....
பல நூறு கைகள் ஒன்றாய் என்னை
பாராட்டி கை தட்டிக் கொண்டிருந்த பொன் பொழுதில் ...
'வெற்றியாளனிடமே உலகம் மயங்கும்' என்ற
உன்னத பாடத்தை நான் உருவேற்றிக் கொண்டதும்......
இதே பள்ளிக் கூடத்தில்தான் .

ஒன்பதாம் வகுப்பு A யும் பத்தாம் வகுப்பு B யும்
இப்போதும் என் கனவில் எப்போதும் வரும் .

எப்போதோ எங்கோ கேட்கும் குரல்கள் கூட
என் பள்ளிக் கூ(ட்)டத்து நினைவைத் தந்து
பரவசப் பட வைக்கும் இன்றும் .

நெட்டிலிங்க மரங்களை எங்கே பார்த்தாலும்
என் நெஞ்சுக்குள் தெரியும் பள்ளியின் நெருக்கம் .

அன்று அரசு உயர்ந்ளைப் பள்ளி ....
இன்று அரசு மேல்நிலைப் பள்ளி . !

வளையாது வாழ வழி காட்டிய பள்ளி முன்னால்
இப்போது ஒரு வளைவு ......
இருக்கட்டும் ...!

அதுவும் ஒரு அழகுதான் .
வளர்ச்சிதானே வாழ்க்கை .

ஆனாலும் ஒரு கோரிக்கை .

புதிய கால்கோல்கள் கட்ட
பழைய மண்ணை அள்ளியவர்களே!
அதன் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு ?
அந்த மண்ணுக்கும் திருநீற்றுக்கும்
அதிக வித்தியாசம் இல்லை .

புதிய கட்டிடங்களைக் கட்ட
பழைய கட்டிடங்களை இடிப்பவர்களே !

அந்த செங்கற்களை அப்புறப்படுத்துகையில் ....

பதவியில் இருக்கும்போதே செத்துப்போன
பிரதமர் முதல்வரின் உடல்களைப் போல ........

பதவிசாய்... பக்குவமாய்... பரிவோடு கையாளுங்கள்! .

இதயங்களின் வாழ்க்கையும் மூளைகளின் வேட்கையும்
இணைந்து கிடப்பது அந்த செங்கற்களில்தான் .

மொத்தத்தில் அந்தப் பள்ளி ....

பல தலைமுறைகளின் மேல்
படிந்திருந்த அறியாமை இருட்டை
ஒரே திறப்பில் துடைத்தெறிந்த
உன்னத விடிவெள்ளி .!

Thursday, February 3, 2011

# நிருபமா ராவ் -- ராஜபக்சே என்ன பேசி இருப்ப்பார்கள் ? -- ஒரு நியாயமான யூகம்




ராஜா பக்சே :வாங்க நிரூ .. என்ன விஷயம் ?

நிருபமா :தெரியாத மாதிரி கேட்காதீங்க . நான் எதுக்கு வந்திருப்பேன்னு தெரியாதா ?

ராஜபக்சே : தெரியும் . ஆனா அத உங்க வாயால நீங்க அசடு வழிய சொல்லி கேட்டா, எங்களுக்கு நல்லா பொழுது போகும் இல்லியா ?

நிருபமா : ஆனாலும் ரொம்ப குறும்ப சார் நீங்க . சரி சொல்லுறேன் . கேட்டுக்குங்க . கோடை இரவுகளிலும் கடல்ல தண்ணி சுடாம இருந்தாலும் இருக்கும . உங்க ராணுவம் தமிழக மீனவர்களை சுடாம இருந்தது இல்ல . நீங்க அதை நிறுத்தணும்னு சொல்லத்தான் வந்தேன் .

ராஜபக்சே : மெய்யாலுமா ? சோனியா பாபி இப்படித்தான் சொல்லி விட்டுச்சா

நிருபமா : (மனதுக்குள் ) என்ட்ரா இதி சால பிராப்ளமுக உன்னாவு (வாய் விட்டு ) அது இல்ல சார் . நீங்க கொஞ்சம் அதை நிறுத்தணும்.

ராஜ பக்சே : கொஞ்சம்னா ... ஒரு நாளைக்கு ஒரு தமிழக மீனவன் என்பதை மாத்தி ஒரு வாரத்துக்கு ஒரு தமிழக மீனவன் ....ஒகே வா ?

நிருபமா : (தயங்கியபடி ) இல்ல சார் ... நீங்க .....ஒரு..... மூணு நாலு மாசத்துக்கு..... யாரையும் .....சுடவே... .....கூடாது

ராஜபக்சே : ( கோபாவேசத்தோடு ) என்னது ? என்ன நிரூ ... கிண்டலா ? எங்க உரிமைய நீங்க பறிக்கப் பாக்குறீங்களா ?
தன் இனம் சாவும்போடும் காசு வாங்கிக்கிட்டு தேர்தல் விபச்சாரம் பண்ணி வாக்குரிமைய கூட்டிக் கொடுக்க எங்களை என்ன மானங்கெட்ட தமிழன்னு நினைச்சீங்களா ?

இல்ல ஒட்டு போட்ட மக்களுக்கே வேட்டு போட நாங்க என்ன தமிழ்க் அரசியல்வாதியா ?

என்ன பேச்சு பேசறீங்க . நீங்க நிஜமாவே டில்லி சொல்லித்தான் வந்தீங்களா ?

டேய் தம்பி கோத்தா பய ... சோனியாவுக்கு போன் போடு .. பிரணாப் முகர்ஜிக்கு போன் போடு . .. எம் கே நாராயணனுக்கு போன் [போடு ....சிவசங்கர மேனனுக்கு போன் போடு .. ராகுல்காந்திக்கு போன் போடு ...

லைன் கிடைக்கலேன்னா , நேரா நம்ம கருணாநிதிக்கே போன் போடு . அதும் பிராப்ளம்னா ஈ விகே எஸ் இளங்கோவனுக்கோ , சோ ராமசாமிக்கோ ஒரு போன் போடுறா .

இந்த பொம்பள நிஜமாவே நம்ம ஆளுங்க சொல்லித்தான் வந்திருக்கான்னு .....

நிருபமா: (குறுக்கிட்டு ) இருங்க இருங்க அவசரப்படாதீங்க . அவங்க சொல்லித்தான் வந்திருக்கேன் .

இது எலக்ஷன் வரப் போற நேரம் . நீங்க பாட்டுக்கு சுட்டுக் கொல்லற ஆட்களோட பாடிய காட்டி அவங்க குடும்பங்களும் ஜனங்களும் 'அநியாயமா (!)" அழுது ஆர்ப்பாட்டம் பண்றாங்க . கலைஞர்காரு வேற தினசரி காலைல எழுந்ததும் பேஸ்ட் பிரஷோட அஞ்சு லட்ச ரூபா பணத்தையும் பக்கத்துல வச்சிக்கிட்டுதான் படுக்கையை விட்டே எந்திரிக்கிறார் . பயமா இருக்கு

என்ன பண்ணி தொலைக்கறது ? இந்தியாவுல தமிழனுக்கு இன்னும் ஓட்டுரிமை இருந்து தொலைக்குதே .அவனுங்க எங்களுக்கு எதிரா ஒட்டு போட்டுட்டா , அப்புறம் நாங்க ஜெயிக்க முடியாம போயிட்டா , நீங்க எப்படி தொடர்ந்து சுட முடியும் ?

உங்க மாதிரி நாங்களும் எப்பதான் இந்தியாவுல தமிழனுன்களோட ஓட்டுரிமையை ரத்து பண்ணப் போறமோ தெரியல . அப்புறம் உங்களை இப்படி தொந்தரவு செய்ய மாட்டோம் . அதுவரைக்கும் எங்களை மன்னிக்கணும்

அதனால தயவு [பண்ணி நீங்க சுடுற வேலைய ஒரு மூணு மாசம் நிறுத்தி வைங்க .

வேண்ணா மூணு மாசத்துல எத்தன பேரை சுடணும்னு கணக்கு பண்ணி வச்சுக்குங்க . தேர்தல் முடிஞ்சதும் மொத்தமா போட்டு தள்ளுங்க . எந்த பய உங்களை கேட்க இருக்கான் ? நம்ம அன்னைய 'பல்க்'கா சந்தோஷப் படுத்துங்க . யாரு வேணாம்னா ?

ராஜ பக்சே : அதான பாத்தேன் . நான் கூட உங்க எல்லாருக்கும் நிஜமான இந்திய தேசப் பற்று வந்துடுச்சோன்னு பார்த்தேன் .

நிருபமா : கொஞ்சம் மனசு வைங்க ராஜா .

ராஜபக்சே : புரியுது நிரூ . என்ன பிரச்னைன்னா , நாங்க தமிழன சுட்டு பொணமா அனுப்பும்போது அதைப் பார்த்து அவன் பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் அழுறத பாக்குறதுல ஒரு சந்தோசம் . அந்த சந்தோசம் மூணு மாசம் இல்லாம போற சோகத்தை நினைச்சு என் சிங்கள இனமே கண்ணீர் வடிக்குமே

பரவா இல்ல . ஆனா ஒண்ணு அங்க உள்ள நம்ம ஆளுங்க கிட்ட ஒரு விசயத்தை சொல்லிடுங்க . தமிழன சுட்டுக் கொல்லாம எல்லாம் இருக்க முடியாது . நீங்க கொடுத்த ஆயுதமே இன்னும் நிறைய இருக்கு . அதெலாம எப்ப யூஸ் பண்றது? வேண்ணா ஒண்ணு பண்றோம் . பாடியை அப்படியே விட்டுட்டு வராம இங்க கொண்டு வந்து எரிச்சுகறோம் . ஆனா அதுக்கு பெட்ரோல் செலவு எல்லாம் இந்திய கடல்படைதான் தரணும். டீல் ஒகே வா ?

நிருபமா ; டபுள் ஒகே . மீனவர்கள் காணவில்லைன்னு நியூஸ் வர வச்சு அப்படியே மறக்க அடிச்சுடலாம். கவனம் ......பாடி கிடைக்கவே கூடாது சரியா ?

ராஜபக்சே :. ஓகே ஓகே

நிருபமா ; சும்மா சொல்லக் கூடாது . கில்லாடி சார் நீங்க .

ராஜபக்சே : இல்லன்னா வல்லரசு நொல்லரசுன்னு ஊள உதார் விடற உங்கள நொண்டி நொங்கெடுத்து , என் காலைக் கழுவி குடிக்க வைக்க முடியுமா ? புத்தம் சரணம் கச்சடா ..

நிருபமா ; சார் அது கச்சாமி சார் .

ராஜபக்சே ; அத விடுங்க . எனக்கு ஒரு டவுட்..! நாங்க உங்க இந்தியாவோட தென் எல்லை மீனவர்களை தமிழக மீனவர்கள் அப்படின்னு சொல்றோம் . ஆனா நீங்களும் அவர்களை இந்திய மீனவர்கள் என்று சொல்லாம தமிழக மீனவர்கள் அப்படின்னே சொல்றீங்களே . அவங்க உங்க இந்திய மீனவர்கள் இல்லியா ?

நிருபமா ; என்ன சார் இது ... இப்பதான் உங்கள கில்லாடின்னு சொன்னேன் . இப்படி உளர்றீங்க . நாங்க தமிழர்களை இந்தியர்களா நினைக்கவே மாட்டோம் . ஆனா அவங்க மட்டும்" நாங்க இந்தியர்கள் நாங்க இந்தியர்கள்" னு நினைக்கணும் . அதான் இந்தியா

ராஜபக்சே ; (மெய்சிலிர்த்து கண் கலங்கி உணர்ச்சிவசப்பட்டு ) ஜெய்ய்ய் ஹிந்த்த்த்!