Tuesday, August 10, 2010

#இறையாண்மை என்றால் ....





அவன் உன்னை
செருப்பால் அடிப்பான் .
அடிபட்ட இடத்தை நீ
துடைக்கக் கூடக் கூடாது .

துடைத்தால் நீ
துரோகி .

அவன் உன் முகத்தில்
காறி உமிழ்வான் .
நீ உன் முகத்தை
விலக்கிக் கொள்ளக் கூடாது .

விலக்கினால் நீ
விரோதி .

அவன் உன் கையை
கத்தியால் வெட்டுவான் .
நீ அவன் பாதத்தில்
நகத்தால் கூடக்
கீறக் கூடாது .

கீறினால் நீ
கீழ்த்தரமானவன் .

அவன் உன்
தாலியறுப்பான்.
பதிலுக்கு நீ
தடுக்கக் கூடாது .

தடுத்தால் நீ
தரங் கெட்டவன்.

அவன் உன் மேல்
வெடிகுண்டு வீசுவான் .
பதிலுக்கு நீ ஒரு
வெங்காயத்தைக் கூட
வீசக் கூடாது.

வீசினால் நீ
வீணன் .

அவன் உன் பெண்டிரின்
கர்ப்பப்பையில் அடிப்பான்
நீ அவன் பெண்ணைப் பார்த்து
கண்ணடிக்கவும் கூடாது

அடித்தால் நீ
இறையாண்மைக்கு
எதிரானவன்

சீச்சி ...

இந்த மண்ணில்
இறையாண்மை என்பதென்ன?

இல்லவே இல்லாத
ஆண்மையா
?