Friday, May 29, 2009

# சர்வம் படத்தின் கண் மூடித்தனமான கதக்களி


RUBBISH IN A COSTLY DUSTBIN .....!


இதுதான் சர்வம் படம் பற்றிய சுருக்கமான விமர்சனமாக இருக்க முடியும்.


படத்தில் என்னைக் கவர்ந்த விசயங்கள் இரண்டு.


முதல் விசயம்..

சுமார் 22 வருடங்களுக்கு முன்பு இசைஞானி இளையராஜா இசைத்த ‍‍‍- வயலின்கள் கொஞ்சியபடி குதூகல ஊஞ்சல் ஆடும் - அந்த அற்புதமான பின்னணி இசையை இன்று மிகச் சிறந்த ஒலி அமைப்புக் கொண்ட நல்ல திரையரங்கில் கேட்டபோது மனசுக்குள் அலையடித்த சிலிர்ப்பு.


( நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த வாழ்க்கை என்ற திரைப் படத்தில் ரவீந்தர் , சில்க் சுமிதா இருவரும் நடனமாடும் "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு ..' என்று துவங்கும் அம்சமான பாடல் இது.இதைக் குறிப்பிட்டு எழுதக் கூட இன்றைய பல பிரபல பத்திரிக்கைகளில் விசயம் தெரிந்த விமர்சகர்கள் இல்லை என்பது கவனிக்கத் தக்கது.


சன் தொலைக்காட்சியில் நான் நிகழ்ச்சி இயக்குனராக(programme produceர்) இருந்த போது 2000 ம் ஆண்டு பிறந்த இரவில் நான் இயக்கி வழங்கிய நுற்றாண்டுத் திரை இசை என்ற நிகழ்சியில் , இளையராஜாவின் மிகச் சிறந்த வாத்தியப் பயன்பாட்டுப் பாடல் என்று அதை நான் குறிப்பிட்டிருந்தது எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் உள்ளது)



சர்வம் படத்தில் என்னை மிகவும் கவர்ந்த இரண்டாவது விசயம்... நிரவ் ஷா வின் ஒளிப்பதிவு.


என் ந‌ண்ப‌ர் த‌ங்க‌ம‌ணி பிர‌பு த‌ன‌து சிந்த‌னி வ‌லைப் ப‌திவில் ச‌ர்வ‌ம் ப‌ட‌த்தின் ஒளிப்ப‌திவு ப‌ற்றி எழுதும்போது,ஒரு முறை ர‌வி.கே.ச‌ந்திர‌ன் அவ‌ரிட‌ம் 'ஒரு ப‌ட‌த்தில் ஒளிப்ப‌திவு சிற‌ப்பாக‌ உள்ள‌து என்று த‌னித்துத் தெரியும்ப‌டி இருந்தால் அது ந‌ல்ல‌ ஒளிப்ப‌திவு அல்ல‌' என்ற ரீதியில் ஒரு க‌ருத்துக் கூறிய‌தாக‌க் குறிப்பிட்டுள்ளார்.ச‌ரிதான். ஆனால் அது ச‌ர்வ‌ம் ப‌ட‌த்தின் நீர‌வ் ஷாவின் ஒளிப்ப‌திவைக் குறை சொல்ல‌ப் பொருந்த‌து என்ப‌தே என் க‌ருத்து.



த‌லை, கண் ,மூக்கு , கை , கால் என்று எதுவுமே ச‌ரியாக‌ இல்லாத‌ ஒரு ந‌ப‌ருக்கு ப‌ல் வ‌ரிசை ம‌ட்டும் மிக‌ அழ‌காக அமைந்து விட்டால் ... அவ‌ர் என்ன‌தான் அதை அட‌க்கி வைத்துப் பார்த்தாலும் அவ‌ரையும் அறியாம‌ல் வாய் விட்டுச் சிரிக்கும்போது ப‌ளிச் என்று ப‌ல‌ரையும் க‌வ‌ர்ந்து விடும்.



அது போல‌ எதுவுமே உருப்ப‌டியாக‌ இல்லாத‌ ச‌ர்வ‌ம் ப‌ட‌த்தில் நீர‌வ் ஷா வின் ஒளிப்ப‌திவு ம‌ட்டும் ந‌ன்றாக‌ உள்ள‌ நிலையில் ( உண்மையில் அவ‌ர் கொஞ்ச‌ம் அட‌க்கி வாசித்திருகும்போதும் கூட‌, அது ப‌ல‌ரையும் க‌வ‌ரும்ப‌டி ஆகிவிட்ட‌து)


பொதுவில் இய‌க்குன‌ர் விஷ்ணுவ‌ர்த‌னிட‌ம் ம‌திக்கும்ப‌டி பெரிதாக‌ எந்த‌த் திற‌மையும் கிடையாது. ந‌‌ய‌ன‌தார‌வின் டூ பீஸ் ம‌ட்டும் இல்லாவிட்டால் பில்லாவே கொஞ்ச‌ம் பீஸ் பீஸ் ஆகியிருக்கும்.


மற்றபடி பலரும் சர்வம் படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் குவித்துவிட்ட நிலையில் அதன் விமர்சனத்தை விலாவாரியாக எழுத நன் வரவில்லை.

நான் சொல்ல வருவது மலையளிகளின் inteelectual arrogance பற்றி!



பில்லா படத்துக்குப் பிறகு விஷ்ணுவர்தன் சிம்புவிடம் கால்ஷீட் கேட்டுப் போனதாகவும் அவர் மறுத்து விட்டபடியால் , சிம்பு படம் பார்ப்பதை விட மாடியில் இருந்து குதித்து விடலாம் என்பது போலவும் அதே நேரம் அஜீத் படம் பார்த்தால் மட்டும் 100 அடி உயரத்தில் இருந்து குதித்தால் கூட மாயக் கம்பளம் அப்படியே ஏந்தி இறக்கி விட்டு விடும் என்பது போலவும் வசனத்தை அற்பத்தனமாக வைத்துள்ளார்.



என்னோடு படம் பார்த்து படம் போட்ட ரம்பம் மற்றும் மேற்படி வசனத்தால் முகம் சுளித்த ஒரு ஒளிப்பதிவாளர் (அவர் அனுமதியின்றிப் பெயர் சொல்ல எனக்கு அனுமதி இல்லை) என்னிடம், "சிம்புவாச்சும் இந்த வயசுலயே ஒரு நல்ல நடிகர், திரைக்கதையாளர்,இயக்குனர்,பாடகர்னு எல்லாம் தன்னை நிரூபிச்சாச்சு. ஆனா , அஜித் குளோஸ் ‍ அப் ல சிரிக்கிற மாதிரியான ஷாட்கள எடுக்கும்போது கொஞ்சம் கெர்ஃபுல்லா லைட்டிங் பண்ணலைன்னா மார்சுவரியில பிணம் சிரிக்கிற மாதிரியே இருக்கும்." என்றவர் நான் அதை அவ்வளவாக ரசிக்கவில்லை என்று தெரிந்ததும் "அட.. நெஜமா சார்.. பில்லா எடுத்த விஷ்ணுவர்த்தனுக்கு இது நல்லாவே தெரிஞ்சிருக்கும்..அதப் பத்தி அடுத்த படத்துல அவரு டயலாக் வைக்கட்டும்" என்றார் சீரியஸாக.



நம்ம ஆட்களுக்கு படத்தில் எதாவ்து ஒரு நல்ல மியூசிக் பிட் வந்து விட்டால் போதும். உடனே கேரளத்துக் கதக்களி ஆடுபவர்களுக்கு சொல்லி விட்டு விடுவார்கள். கேட்டால் குஷ்டரோகி மாதிரி கைகளை விரித்து ஃபிரேம் பார்த்தபடி , "ஸீ..இட்ஸ் வெரி கலர்ஃபுல்யா.." என்பார்கள்.கதக்களியைவிட வண்ணமயமான எத்தனையோ தமிழ்க் கலாச்சார நடனங்கள் உண்டு.மக்கள் தொலைக்காட்சியை கொஞ்ச நேரம் பார்த்தாலே பல கிடைக்கும்.ஆனாலும் நம்மவர்களே கதக்களியின் காலைக் கழுவிக் குடிக்கும்பொது விஷ்ணுவர்தன் சர்வம் படத்திலும் கதக்களி நடனத்தைப் பயன்படுத்தியதை நான் பெரிதாகக் கருதவில்லை.



சர்வம் படத்தில் என்னை மிகவும் கடுப்பேற்றிய கொடுமை ஒன்று ... கதைப்படி மூணு ஷாவின்( நன்றி;தமிழக கிசுகிசுப் பத்திரிக்கையளர்கள்)மாற்று இதயம் பொருத்தப்பட்ட சிறுவனாக நடித்த பயல் பேசும் மலையாள நாற்றம் அடிக்கும் பேச்சுத் தொனிதான்.

ப‌ட‌த்தின் இய‌க்குன‌ர் விஷ்ணுவ‌ர்த‌ன் ஒரு ம‌லைய‌ளி. ஆர்யா ம‌லையாளி.சிறுவ‌னின் த‌ந்தையாக‌ வ‌ரும் இந்திர‌ஜித் ம‌லையாளி.ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌ர் பாத்திர‌ம் என்றால் வேறு ஆளே இல்லை என்ப‌து போல இதிலும் ந‌டித்திருக்கும் முத‌ல் மூத்த‌ 'சித்த‌‌ப்பா' பிர‌தாப் போத்த‌ன் மலையாளி.அந்தச் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ள சிறுவனும் மலையாளி.வில்லனாக வரும் ஜே.டி. மலையாளியில்லை. இருங்க.. அவசரப் படாதீங்க..அவர் தமிழர் இல்லை .. தெலுங்கர்... ஆனால் இது தமிழ்ப் படம் .. தூ......!


-‍‍ என்று நான் சொன்னால்.."என்ன பேச்சு இது? திரிஷா தமிழர் இல்லையா...யுவன் ஷங்கர் ராஜா தமிழன் இல்லையா..'என்பார்கள் . "பின்னும் கலைக்கு மொழியில்லா ஸாரே..."

அப்படியே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். படத்தில் கதைப்படி அப்பா நல்ல தமிழில் பேசும்போது , மகன் இப்படி மலையாள நாற்றத்தோடு பேசுவது எப்படி சாத்தியம்..? என்ன லாஜிக்?

பொதுவாக குழந்தைகள் , நல்லவர்கள் ஆபத்துக்கு ஆளாவதைக் கதைகளில் கூடச் சீரணிக்க முடியாத உங்களைப் போன்ற மனிதன்தான் நான் .


ஆனால் தமிழை அந்தச் சிறுவன் கொன்று குதறியதால் எழுந்த ஆத்திரத்தில் வில்லன் ஜே.டி . எப்போது அந்தப் பயலைக் கொன்று புதைப்பார். அல்லது வில்லனின் வேட்டை நாய் எப்போது தமிழைக் கடித்துக் குதறும்அந்தச் சிறுவனின் கழுத்தைக் கடித்துக் குதறும் என்று ஏங்க ஆசைப் படுகறது பாழும் மனசு.


"என்னவோ எல்லா நடிகர்களும் தமிழை ஒழுங்காகப் பேசுவது போல எண்ணி அந்த சிறுவன் கதாபாத்திரத்தின் மேல் இவ்வளவு கோபப் படுவது சரியா என்று கேட்கலாம்.


ஒரு மொழியை ஒழுங்காகப் பேசாதது கொடுமை எனில்,அந்த மொழியின் மேல் வேறொரு மொழியைத் திணித்துக் கொடுமை செய்வது என்பது கொடுங் கொடூரக் கொடுமை!



அதாவது அந்தக் கதாபாத்திரத்தில் ஒரு மலையாள சிறுவனைத்தான் நடிக்க வைப்பார்களாம்.அதே நேர‌த்தில் அவனுக்கு ஒழுங்காகத் தமிழ் பேசச் சொல்லிக் கொடுக்கவும் மாட்டார்களாம் .சரி அவனுக்கு ஒழுங்காகத் தமிழ் பேச முடியவில்லை என்றால் சரியான வேறு ஒரு சிறுவனை வைத்துப் பின்னணிக் குரல் கொடுக்கவும் செய்ய மாட்டார்களாம் .


எவ்வளவு கேவலமாகப் பேசினாலும் தமிழ் குதறப் பட்டாலும் லாஜிக் எந்த அளவுக்கு இடித்தாலும் படத்தில் நடிதத அந்த மலையாளச் சிறுவன்தான் பின்னணி பேசவும் வேண்டுமாம்.தமிழ்தானே.. கேவலமாக இருந்தால் என்ன ?


ஆனால் பேச்சு ந‌ட‌வ‌டிக்கைக‌ளைப் பாருங்க‌ள்..10 கோடி ரூபாய் ப‌ண‌த்தை வான‌த்தில் வீசி எறிந்து விட்டு ஒன்றையும் விட்டு விடாம‌ல் மீண்டும் பிடித்து விட்ட ஆட்கள் மாதிரி அல‌ட்டுவார்க‌ள்.


இவ‌ர்க‌ள் எல்லோரையும் கூட‌ ம‌ன்னித்து விட‌லாம்.


ம‌ன்னிக்க‌வே முடியாத ஆட்கள் இருவ‌ர்.

ஐங்க‌ர‌ன் இண்ட‌ர்நேஷ‌ன‌ல் நிறுவ‌னம் சார்பில் இந்த‌ப் ப‌ட‌த்தை இப்படி எடுக்க அனுமதித்த எடுத்த லண்டன் கருணாஸ் ஒரு இலங்கைத் தமிழர்.அதன் இணைத் தயாரிப்பளர் ( நடிகர்)அரூண் பாண்டியன் ஒரு தமிழ் நாட்டுத் தமிழர்.

அப்புற‌ம் எப்ப‌டி த‌மிழீழ‌ம் கிடைக்கும்?

Monday, May 25, 2009

#கதற வைக்கும் சீக்கியனும் கைப்புள்ள தமிழனும்


ஆஸ்திரியா.. ஆஸ்திரியா.. என்று ரெண்டு தேச‌ம் இல்ல‌.. ஒரே தேச‌ம்தான்.

அட‌..ஆஸ்திரேலியா இல்லீங்க‌ .. ஆஸ்திரியா..! உங்க‌ ச‌ந்தேக‌ம் நியாய‌ம‌ன‌துதான். ந‌ம்ம‌ ஆட்கள் பல பேருக்கு ஆஸ்திரேலியா தெரிஞ்ச அளவுக்கு ஆஸ்திரியா தெரியாது.
அந்த ஆஸ்திரியாவுல விய‌ன்னான்னு ஒரு ந‌க‌ர‌ம் ..அங்க‌ ஒரு குருத்துவாரா..!அந்த‌ குருத்துவாரா உள்ள‌ துப்பாக்கியோட‌ நுழைஞ்ச சில‌பேரு சுட்ட‌துல அந்த குருத்துவாராவுல‌ இருந்த ராமான‌ந்த் என்ற‌ குரு இத‌ய‌த்துல‌ துவார‌ம் விழுந்து செத்துப் போயிட்டாரு.அவ‌ருட‌ன் இன்னும் ஒரு 8 பேரும் செத்துட்டாங்க‌!சுமார் 30 பேரு ப‌டுகாய‌த்துட‌ன் க‌வ‌லைக்கிட‌ம்.

ந‌ட‌ந்த‌து எங்க‌...?
அட‌ஆஸ்திரேலியா இல்லைங்க ..ஆஸ்திரியா..!
எங்க‌ ,திருப்பிச்சொல்லுங்க‌ ..ஆஸ்திரியா‌.க‌ரெக்ட்!
சுட்டவன் வேற மதத்துக்காரனோ வேற மொழிக்காரனோ வேற .இனத்துக்கரனோ இல்லீங்க.அதேஏஏ....... சீக்கியன்ல இன்னொரு பிரிவு.அதாவது நம்ம ஊர்கள்லயும் அப்பப்ப முட்டாள்தனமா நடக்குமே சாதிக் கலவரம் ... அது மாதிரியான
சமாச்சாரம்
சமபவம் நடந்த சில மணி நேரத்துக்குள்ள இந்திய பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் எல்லாம் அநியாயமா ஆஸ்திரியாவோட ..ஆங்.. அது என்னங்க.. அதான் .. இறையாண்மை...அதுல அராஜகமா தலையிட்டு.."உடனே நடவடிக்கை எடு .. உடனே நடவடிக்கை எடு "ன்னு படுத்தி எடுத்துட்டாங்க..

ஆஸ்திரியாக்காரன் ,"அட இருங்கடா.. உங்க ஆளுங்க .. இங்க பொழைக்க வந்துட்டு இங்கயும் ஜாதி பிரச்னை அது இதுன்னு அசிங்கம் பண்ணி சுட்டுக்கிட்டு அசிங்கப் படுத்தினா , நீ வேற சரியா விசாரணை கூட பண்ண விட உசுர வாங்கறீங்க"ன்னு பொரிஞ்சுக் கிட்டே பதில் சொல்லுறான் .

ஆஸ்திரியாவுல ..மறுபடியும் சொல்றேன் ஆஸ்திரேலியா இல்ல...ஆஸ்திரியா ..அங்க சீகியனுங்க ரெண்டு பிரிவா பிரிஞ்சு அடிச்சுக்கிட்டதுக்காக.. இங்க .. நம்ம நாட்டுல ... பஞ்சாப் ல அதே ரெண்டு பிரிவு சீக்கியனுங்களும் அடிசுக்கிட்டு வெட்டிக்கிட்டுச் சாகுறாங்க.. சரி அது அவங்க விருப்பம் .. நாம சொல்ல ஒண்ணும் இல்ல..

ஆனா..மக்கள் வரிப் பணத்துல உருவாக்கப் பட்ட ஏகப் பட்ட பொது சொத்துக்களை உடைச்சு எரிச்சு நாசம் பண்றாங்க.லுதியானா , ஜலந்தர், ஜம்மு கலவரம் சும்மா அம்மு அம்முனு அம்முது.கன்யாகுமரி வர்ற ரயிலுக்கு தீ வச்சு இருக்காங்கனா பாருங்களேன்.

இங்க இலங்கையில அ நியாயமா அழிக்கப் படுற தமிழனுக்காகவும் அவன காப்பாத்தப் போராடின இயக்கங்களுக்காகவும், இலங்கைக் க்டற்படையால் சுட்டுக் கொல்லப் படுற தமிழ் நாட்டு மீனவனுக்காகவும் குரல் கொடுத்து ரெண்டு வார்த்தை பேசினாலே தேசிய பாதுகாப்புச் சட்டத்தைத் தூகிக் கிட்டு வந்த பசங்க .. அதுக்கு ஒத்து ஊதின வெத்து வேட்டுங்க எல்லாம்..

சீக்கியன்னு வரும்போது மட்டும் ஊரடங்கு உத்தரவு போடுறானே ஒழிய..மத்தபடி வாயப் பொத்திக்கறான். நியாயமான விசயத்துக்கு சட்டத்தை ஆண்மையொடு பயன்படுத்தாத வெத்துவேட்டாத் திரியுறான்.

பிரதமர் மன்மோகன்சிங் என்னடான்னா.. ஒரு பிரதமரா லட்சணமா குற்றம் செய்பவர்களை எச்சரிக்காம ... அமைதியா இருங்கன்னு கால்ல விழுந்து கெஞ்சிக் கதறி அறிக்கை விடறாரு.

ஊர ஏமாத்தி ஜெயிச்சி உள்துறை அமைச்சரா உட்கார்ந்துருக்கற ப(ணப் பெட்டி).சிதம்பரமும் கூட,உள்துறை அமைச்சரா லட்சணமா கலகம் செய்பவர்களைக் கண்டிச்சு அறிக்கை விட வக்கு இல்லாம பஞ்சாப்க்கு 14 துணை ராணுவப் பிரிவுகளை அனுப்பியாசுன்னு சொல்லி நிறுத்திக்கிச்சு.

அட அதோட விட்டிருந்தா கூட இன்னிக்கு நான் இத எழுத வேண்டிய அவசியம் வந்திருக்காது.
பஞ்சாப் ல சதி வெறி பிடிச்சு கலவரம் பண்ணி இந்தியாவின் பல பகுதி மக்களையும் பாதிப்புக்குள்ளாக்குகிற தேச விரோதிகளையும் கலகக் காரர்களையும் கண்டிச்சு ஒரு வார்த்தை கூட .. ஒரு ஹோம் மினிஸ்டர் என்ற ரீதியில் பேசும் ஆண்மை இல்லாத ப.சிதம்பரம் இன்னிக்கும் சொல்லி இருக்கிறது என்னனா..

"விடுதலைப் புலிகள் ....கடற்கரை வழியாக.... ஊடுருவ வாய்ப்பு உள்ளது.....கவனமா இருக்கணும்......"

அட தூ.........................!

இதெல்லாம் என்ன ஜென்மம்னே தெரியல.
கண்முன்னாடி கலவரம் பண்ணி பொது சொத்துக்களைச் சேதப் படுத்தும் சீக்கியனை ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இன்னும் விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லிப் பிழைக்கத் துடிக்கும் இதுகளை மனசாரத் திட்ட உலகின் எந்த மொழிகளிலும் வார்த்தைகள் இருப்பதகத் தெரியவில்லை.

ஆக‌வே த‌மிழா..!

எங்கோ..ஆஸ்திரியாவுல‌ (ஆஸ்திரேலியா இல்ல....) ஒரு ப‌த்துப் ப‌தினைஞ்சு சீக்கிய‌னுங்க‌ கொழுத்துப் போயி தங்களுக்குள்ள துப்பாக்கியால‌ சொறிஞ்சுகிட்டதூகாக இன்னிக்கு சீக்கிய‌ர்க‌ள் க‌ல‌வ‌ர‌ம் செய்து இந்தியாவின் ஒரு பெரிய‌ ப‌குதியையே ஸ்த‌ம்பிக்க‌ வ‌ச்சாலும், அவ‌னுங்க‌ மேல‌ கை வைக்க‌ ஒரு ப‌ய‌ புள்ளைக்கும் தெம்பு இல்ல‌..

ஆனா.. இல‌ங்கையில உன் ர‌த்த உற‌வுக‌ள் மூணு ல‌ட்சம் பேர் கொல்ல‌ப் ப‌ட்டு .. ப‌ழைய‌ ப‌துங்கு குழிக‌ளில் உயிரோடு த‌ள்ள‌ப் ப‌ட்டு ம‌ண் கொட்டி உயிரோடு மூச்சுத் திண‌ற‌ வைத்துக் கொல்ல‌ப் பட்டாலும், காய‌ம் அடைந்த‌ ம‌க்க‌ள் மீது புல்டோச‌ர் கொண்டு ஏற்றி நொறுக்கிக் கொல்ல‌ப் பட்டாலும் உன்னால ஒண்ணும் புடுங்க முடியாது.

ஏன்னா.. நீ இன உணர்வு இல்லாத ஜடம்.தேவையான தேர்தல் சமயத்துல மட்டும் சில நூறு ரூபாய்களை உன் மூஞ்சியில வீசி அடிச்சா, அதைப் பொறுக்கிக் கிட்டு உன் வாக்குரிமையை கூட்டிக் கொடுத்துடுவன்னு அவனுக்கு நம்பிக்கை இருக்கு.
அரசியல் தலைவர்கள் என்பவர்கள் நமது வேலைக்காரர்கள் என்பதையும் வேலையை ஒழுங்காகச் செய்ய வில்லை என்றால் அவனைத் துக்கி எறிய வேண்டும் என்றும் தெரியாமல் ,
என்னதான் அரசியல்வாதிகள் உன்னை ஏமாற்றினாலும் ஓட்டுப் போடுவது என்பதை, தவறாக ... குல மகளிரின் கற்பு நெறி போல அவனுக்கே ஓட்டுப் போடுகிற அற்பம் நீ.

அதனல்தான் சீக்கியன் அநியாயம் செய்தும் இந்தியாவைக் கதற வைக்கிறான் .

ஆயிர‌மாயிர‌ம் இழ‌ப்புக்க‌ளைச் ச‌ந்தித்தும் நீ வின்ன‌ர் ப‌ட‌த்துக் கைப் புள்ள வ‌டிவேலு மாதிரி வீணாகிக் கொண்டிருக்கிறாய்!




Sunday, May 24, 2009

# 'மலையாள வெட்டியான்கள் ' எம்.கே. நாரயணனும் ,சிவ சங்கர மேனனும்




உலகப் பெரு மாவீரன் பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டார்(???), விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழிக்கப் பட்டு விட்டது(!) என்று அற்பங்களும் அனாமதேயங்களும் அறிவிலிகளும் ஆள் மயக்கர்களும் அசையோடு நம்பிப் போடும் கூக்குரல்களின் சதிகளால் பல அப்பாவி நல்லவர்களும் வருத்தத்தோடு நம்பி விட்ட சூழ் நிலையில் , என்னை மிக‌வும் பாதிக்கிற‌ சோக‌ம் ஒன்று உண்டு.

இலங்கையில் சிங்க‌ள‌க் காட்டு மிராண்டிக‌ளின் பேரின‌வாத‌ப் பெரும் பித்தால் , ப‌றிக்க‌ப்ப‌டும் த‌மிழ‌ர்க‌ளின் அடிப்ப‌டை ம‌னித‌ உரிமைக‌ளை மீட்டெடுக்கும் ல‌ட்சிய‌ உண‌ர்வில் 1915ஆம் ஆண்டு அற‌வ‌ழி உரிமைப் போராட்ட‌மாக‌த் துவ‌ங்க‌ப் ப‌ட்டு , ம‌னிதாபிமான‌மே இல்லாத சிங்க‌ள‌க் காடைய‌ர்க‌ளுக்கு அவ‌ர்க‌ளுக்குப் புரியும் மொழியில் சொன்னால்த‌ன் புரியும் என்ப‌தால் 1950க‌ளில் ஆயுத‌ப் போராட்ட‌மாக‌ வேறு வ‌ழியில்லாம‌ல் மாறி , 1983 ல் ந‌ட‌ந்த மா‌பெரும் ப‌டுகொலைக‌ளுக்குப் பின்னால் அதும‌ட்டும்தான் வ‌ழி என்றாகி, 1980களின் ம‌த்தியில் அது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாபெரும் விசஸ்வரூபமாக வியாபித்து ,

இந்த‌ நூற்றாண்டின் துவ‌க்க‌த்தில் ஈழ‌ம் என்ற த‌னி நாடு உருவாகி , காவ‌ல் துறை , வ‌ணிகம் , ராணுவ‌ம் ,விளையாட்டு ,க‌ல்வி, த‌மிழ் மொழி ம‌ற்றும் இன‌ உணர்வு , த‌னி ம‌னித‌ ஒழுக்க‌ம் , ச‌மூக‌ ஒழுக்க‌ம் போன்ற‌ அனைத்து விஷ‌ய‌ங்களிலும் , உல‌கிற்கே உதார‌ணம் காட்ட‌க் கூடிய‌ த‌குதியோடு இருந்த த‌மிழ் ஈழ‌ம் என்ற‌ அந்த‌ அற்புதமான‌ நாடு... ந‌ம‌து இந்தியா ,சீனா, பாகிஸ்தான் , ர‌ஷ்யா,இஸ்ரேல் உள்ளிட்ட‌ ஏழு நாடுக‌ள் சேர்ந்து ,ர‌த்த‌ வெறி பிடித்த சிங்க‌ள‌ மிருக‌ங்க‌ளுக்கு வ‌ஞ்ச‌க‌மாக‌ உத‌விய‌தால்....

இன்று அந்த‌ ஈழ‌ நாடு முற்றிலுமாக‌ச் சிதைக்க‌ப் ப‌ட்டு,உல‌கின் மிக‌ப் பெரிய‌ ம‌யான‌ பூமியாக‌ ஆக்க‌ப் ப‌ட்டு விட்ட‌து என்ற கொடூரமான நிஜம்தான் உயிரை ஊடுருவி அறுக்கிறது .

ஒருவ‌ழியாக‌ ந‌ம‌து இந்திய‌ நாட்டு சூனிய‌க்காரிக‌ளும் நோவாம‌ல் ர‌த்த‌ம் .. த‌மிழ் ர‌த்த‌ம் குடிக்க‌க் காத்திருந்த ம‌ற்ற சில மொழியின‌ங்க‌ளும் ஆசைப் பட்ட பலவும் நடந்து விட்டன.பிரபாகரனும் (அவர்கள் கருத்துப் படியே) கொல்லப் பட்டு விட்டார்.300000 தமிழர்கள் உண்மையகவேஅநியாமாகக் கொல்லப் பட்டு விட்டனர்.

சோனியாவின் ர‌த்த‌ வெறியை நிறைவேற்றிக் கொடுக்க‌ அல்லும் ப‌க‌லும் த‌மிழ‌னுக்கு அராஜ‌க‌மாக‌ விரோத‌ச் செய‌ல்க‌ளில் ஈடு பட்ட ,தேசிய பாதுக‌ப்பு ஆலோச‌க‌ரான‌ எம்.கே.நார‌‌ய‌ணன் என்ற மலையாளியும் சிவசங்கர மேனன் என்ற மலையாளியும் இனியாவது மனசாட்சியோடு நாட்டு நலன் ,தமிழர்களுக்கு உதவி செய்வதன் அவசியம் போன்றவற்றை சோனியாவுக்கு சொல்லவாவது செய்வர்கள்.

சோனியாவும் தனது நாட்டின் (இத்தாலி அல்ல)மூத்த இனமான தமிழ் இனத்தின் வரலாற்று நீட்சியாக , சிங்களம் என்ற இனம் உருவாவதற்கு முன்பு இருந்தே ,இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழ் இனத்தை ஒரு சாதாரண வாழ்வாவது வாழ வைப்பார் என்று நம்பத் தோன்றியது.

அத‌ற்கேற்ப‌ 'எல்லாம் முடிந்து விட்ட‌' செய்தியை டில்லியில் விருந்து வைத்துக் கொண்டாடிய‌ பிற‌கு,"ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளின் ந‌ல்வ‌ழ்வு ப‌ற்றிப் பேச வ‌ழ‌க்க‌ம் போல‌ எம்.கே.நாரராய‌ண‌னும் சிவ‌ச‌ங்க‌ர‌ மேன‌னும் இல‌ங்கை செல்வார்க‌ள் என்று செய்தி வ‌ந்த‌து.. 'ச‌ரி.... எத‌ற்கெடுத்தாலும் வ‌யிற்றை எக்கி கைக‌ளை நெஞ்சில் தாங்கி வாயைப் பிளந்து 'எண்டே குருவாயூர‌ப்பா..." என்று கும்பிடுகிற‌ அட்க‌ளாச்சே... அந்த‌ க‌ட‌வுளுக்குப் ப‌யந்து இனியாவ‌து ம‌னுஷ‌ ஜென்ம‌ங்க‌ளாக‌ ந‌ட‌ந்து கொள்வார்கள்' என்று நம்பினால்.... இந்த இர‌ண்டு ச‌குனிக‌ளும் இல‌ங்கை போன‌ பிற‌குதான் தெரிந்த‌து..இவ‌ர்க‌ள் கும்பிடுகிற‌ அந்த‌ குருவாயூரானும் ஒண்ணாம் ந‌ம்ப‌ர் ஃபிராடு என்ப‌து.

ஆம்! இந்த வ‌ஞ்ச‌க‌ ந‌ரிக‌ள் இல‌ங்கை சென்றது இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளின் ந‌ல‌ன் ப‌ற்றிப் பேச‌ அல்ல‌.பிர‌பாக‌ர‌னின் இறப்புச் சான்றித‌ழை வாங்கி வருவதற்காக‌வாம்.
எப்ப‌டி க‌தை?

பொதுவாக கிராம‌ங்க‌ளில் யாராவ‌து இற‌ந்து விட்டால் , புதைக்க‌ வேண்டிய சூழ் நிலையில் குழி தோண்டுவ‌து,ம‌ண் த‌ள்ளுவ‌து, நிர‌வுவ‌து, மாலை சாத்துவ‌து,போன்ற‌ வெலைக‌லைச் செய்ய‌வும், எரிக்க‌ வேண்டிய‌ சூழ் நிலை வ‌ந்தால் ,க‌ட்டை அடுக்குவ‌து, எரிப்ப‌து , அடித்து அமுக்குவ‌து, ம‌று நாள் எலும்பு பொறுக்குவ‌து , பால் தெளிப்ப‌து போன்ற‌ வேலைக‌ளைச் செய்ய‌வும் இருக்கிற‌வ‌ர்க‌ளை வெட்டியான்க‌ள் என்று அழைப்பார்க‌ள்.அவ‌ர்க‌ளுக்கான‌ கூலி இன்று வ‌ரை ரொம்ப‌க் குறைவுதான். ஆனால் ந‌ம‌து வ‌ரிப் ப‌ண‌த்தில் ல‌ட்ச‌ம் ல‌ட்ச‌மாய் ச‌ம்ப‌ள‌ம் வாங்கி ப‌ய‌ண‌ச் செல‌வாக‌ ம‌ட்டுமே கோடி கொடியாய்ச் செலவழித்து மஞ்சக் குளிக்கும் எம்.கே. நாராய‌ண‌ணூம், சிவ‌ ச‌ங்க‌ர‌ மேன‌னும், பிர‌பாக‌ர‌னுக்கு வெட்டியான் வேலை பார்க்கும் மலையாள வெட்டியான்க‌ளாகவே இலங்கை சென்று எலும்பு பொறுக்கிக் கொடுத்து அதற்குப் பதிலாக ராஜ பக்ஷே போட்ட எலும்புத் துண்டைக் கவ்விக் கொண்டு‌ வ‌ந்து விட்டார்க‌ள்.

இவர்கள் கேட்ட எதைப் பற்றியும் கவலைப் படாமல் பிரபாகரன் பிணத்தை (அப்ப்ப்ப்படியாஆஆ?)எரித்து விட்டதாகக் கூறி நம்ம ஆட்கள்முகத்தில் தார் பூசி விட்டது வேறு விஷயம்(முறையாகவெல்லாம் விசாரணை செய்தால் அது பிரபாகரன் உடம்பே இல்லை என்று தெரிந்து விடுமே) எதோ இந்த‌ ரெண்டு பேர் ,ராணுவ‌ அமைச்ச‌ராக‌ இப்போது மீண்டும் ப‌த‌வி ஏற்றிருக்கும் தாந்தொணீ.. இல்லையில்லை.அந்தோணி , என்று இந்த மலையளிகள் மட்டும்தான் தமிழர்களுக்கு எதிரானவர்கள் ஏன்று குற்றம் சாட்டினால் , பாவம் இவர்கள்.

இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு இருந்தே இங்கே தமிழனை ஏய்த்துப் பிழைப்பது,அதே நேரம் தனது மண்ணில் தமிழனைப் பிழைக்க விடாமல் ஒடுக்குவது என்பதில் தீவிரமாக இருந்தனர் மலையளிகள்.(இன்றோ அதி தீவிரம்!) நீதிக் கட்சியின் பெயரால் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற டி.எம். நாயர் என்ற மலையாளி திராவிடன் என்ற போர்வையில்'"தமிழன் மலையாளி எல்லாம் அண்ணன் தம்பிகள் .எனவே தமிழ் நாட்டில் தமிழன் மலையாளியைப் பிழைக்க விட வேண்டும்" என்ற தத்துவத்தை முன்னிறுத்தி தமிழனை ஏற்க வைத்து வெற்றியும் பெற்றார்.
ஆனால் அதே நேர‌ம் நாய‌ரோ அல்ல‌து அப்போதும் த‌ன் பின்ன‌ரும் திராவிட‌ம் என்ற‌ பெய‌ரில் க‌டை விரித்த மற்ற ஆட்களோ அதே போல் ‌ம‌லையாளியும் த‌ன‌து ம‌ண்ணில் த‌மிழ‌னை அங்கீக‌ரிக்க‌ வேண்டுமென்று சொல்ல‌ வில்லை.த‌விர‌ த‌மிழ‌னுக்கு எதிரான‌ உண‌ர்வுக‌ள் ம‌லைய‌ளிக‌ளிட‌ம் அப்போதே இருந்த‌து .தூண்டிவிட‌ப் பட்ட‌தும் தொட‌ர்ந்து ந‌ட‌ந்த‌து.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்ட போது,கே.எம்.பணிக்கர் என்ற ஒரு மலையாளி , அன்றைய டில்லி ஆட்சியாளர்களுக்கு 'படுக்கையறைச் சுகத்துக்கு' தொடர்ந்து மலையாளத்தில் இருந்து "திருவோணத் தேரு வருண்ணே......தை தை... தக தை தை.." என்று தொடர்ந்து ஏற்பாடு செய்து கொடுத்து, தங்களது எஸ்டேட்டுகளின் சுய நலனுக்காக ஒரு பெரிய சதி செய்து.. அன்று 100% தமிழர்கள் வாழ்ந்த தேவிகுளம் ,பீர்மேடு, நெய்யாறு மண்டலம், நெடுமங்காடு பிரதேசம்,பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் அளவு வளமார்ந்த வனம் அடங்கிய குமுளிப் பகுதி ஆகியவற்றை வஞ்சகமாகக் கேரளாவுடன் இணைத்துக் கொண்டனர்.இன்று பவானி நதி , முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைகளால் தமிழகம் பாதிக்கப் படக் காரணம் , அன்று டில்லிப் படுக்கையறைகளில்முண்டு க‌ட்டிய கேர‌ள வ‌ல்லிய‌ பெண் குட்டிக‌ள் ஆடிய காம‌க் க‌த‌க்க‌ளி கோ கேர‌ளாதான் .

உல‌கின் த‌லைசிறந்த இல‌க்கிய‌ங்க‌ளில் ஒன்றான‌ சில‌ப்ப‌திகார‌ம் த‌மிழ் இல‌க்கிய‌ம் என்பது உல‌க‌றிந்த‌ உண்மை.முற்போக்கான‌வ‌ளோ பிற்போக்கான‌வ‌ளோ... எப்ப‌டி விம‌ர்சிக்க‌ப் ப‌ட்டாலும் க‌ண்ண‌கி த‌மிழ் இன‌ப் பெண்மையின் அடையாளம்.க‌ண்ண‌கிக்கு மேற்குத் தொடர்ச்சி ம‌லையில் இருந்த‌ கோவில் சுமார் ஆயிர‌ம் ஆண்டுக‌ளாக‌த் த‌மிழ்ப் பெண்க‌ள் த‌மிழ் முறைப்ப‌டிப் ப‌வுர்ண‌மி தின‌த்த‌ன்று பொங்க‌ல் வைத்து வ‌ழிப‌ட்ட‌ கோவில்.
மொழி வாரி மாநில‌ங்க‌ள் பிரிக்க‌ப் ப‌ட்டுத் த‌னித் த‌னி மாநில‌ங்க‌ளாக‌ ஆன‌ பிற‌கு டில்லி ஆட்சியர்களுக்குச் செய்த அதே படுக்கையறைச் செவையைத் தமிழக ஆட்சியாளர்களுக்கும் செய்து கேர‌ளத்தின் வ‌ன‌ எல்லையை திருட்டுத்தனமாக அதிகரி த்து‌ க‌ண்ணகி கோவிலையும் அப‌க‌ரித்து , அத‌ற்கு ம‌ங்க‌ளா தேவிக் கோயில் என்று பெய‌ர் வைத்து ஒரு வ‌ர‌லாற்று அடையாளத்தை மாசு ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் ம‌லையாளிக‌ள். இன்று ஊட்டி முழுக்க நீல‌கிரி மாவ‌ட்ட‌ம் முழுமையும் ம‌லையாளிக‌ள் ஆதிக்க‌ம்தான்.கோவை மாவ‌ட்ட‌த்தில் தொழில் துறையில் ஆதிக்கம் மட்டும் இன்றி அராஜ‌க‌மும் உண்டு.சென்னையிலும் அப்ப‌டியே.

வ‌ருடா வ‌ருட‌ம் கேர‌ள மாநில‌ம் உருவான‌ நாளை 'ராஜ்யோத்ஸ‌வ‌ விழா'வா‌க‌க் கொண்டாடும் மலையாளிகள் அந்த விழாக்களின் போது எல்ளாம் " க‌ன்யாகும‌ரி மாவ‌ட்ட‌ம் , நீல‌கிரி மாவ‌ட்ட‌ம் இர‌ண்டையும் கேர‌ளாவோடு இணைத்து காச‌ர்கோடு முதல் கன்யாகுமரி வரை அமைந்த ஐக்கிய‌ கேரள‌ம் அமைப்போம்" என்று பேராசையோடு பேசி வ‌ருகின்ற‌ன‌ர்.சென்னையில் ந‌டைபெறும் விழாக்க‌ளில் கூட‌ அவ‌ர்க‌ள் இவ்வாறு பேசுவ‌தும் ந‌ட‌க்கிற‌து. இன்று த‌மிழ‌க‌த்தின் வ‌னத்துறை, வ‌ங்கித் துறை,தொழில் துறை , வணிகத் துறை போன்ற‌வை ம‌லைய‌ளிக‌ளின் கையில்தான் உள்ள‌து.
கேர‌ளத்தில் த‌மிழ‌ர்க‌ள் பெரும்பான்மையாக வாழ்கிற ப‌குதிக‌ளில் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் பிள்ளைக‌ள் பள்ளியில் த‌மிழ் ப‌டிக‌ வேண்டும் என்று ஆசைப் ப‌ட்டால் ரேஷ‌ன் கார்டு ர‌த்து செய்ய‌ப் ப‌டும் என்று ம‌றைமுக ஆர்ட‌ரே இருக்கிறது.இடுக்கி மாவ‌ட்ட‌த்தில் கலக்டராக இருந்த ஒரு மலையாளி துவ‌ங்கி வைத்த‌ வேலை இது.

ஓடுகிற நீரில் சிக்கன் குன்யா நோய் பரவாது என்பது விஞ்ஞான உண்மை.ஆனால் நதி நீர் வழியே சிக்கன் குன்யாவைப் ப‌ர‌ப்பினார்க‌ள் என்று துப்புக் கெட்ட‌ குற்றச் சாட்டை வைத்து 100 த‌மிழ்க் குடும்ப‌ங்க‌ளைக் கேர‌ள போலிசார் அடித்து விர‌ட்டிய‌ அதே ச‌ம‌ய‌த்தில்தான்... சென்னையில் உள்ள‌ ஒரு ல‌ட்ச‌ம் ம‌லையாள ஓட்டுக்க்க‌ளைத் தன‌து திருவோட்டில் பொறுக்கிக் கொள்வ‌த‌ற்காக ஓணம் பண்டிகைக்கு அரசு விடுமுறை கொடுத்தார் கருணாநிதி... இன்றும் கேர‌ளாவில் 85% த‌மிழ‌ர்க‌ள் வாழ்கிற பகுதிக‌ளில் பொங்க‌லுக்கு (அதாவ‌து ம‌லையாள ச‌ங்க‌ர‌ந்திக்கு அடுத்த நா‌ள்)விருப்ப‌ விடுமுறை கூட‌ எடுக்க‌ முடியாது ;விடுமுறை எடுத்தால் 'லாஸ் ஆஃப் பே'யுட‌ன் ம‌லையாள‌ மேல‌திகார‌ப் பேய்க‌ளின் வ‌ச‌வுக்கும் த‌மிழ‌ர்க‌ள் ஆளாக வேண்டியுள்ள‌து என்ற‌ உண்மை தெரிந்திருந்தும்! எப்பேர்ப்பட்ட‌ த‌லைவ‌ன்!

வ‌ட‌ சென்னையில் வெங்க‌டேச‌ப் ப‌ண்ணையார் என்ப‌வ‌ர் அங்குள்ள ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து செய்து சாத‌ர‌ண தமிழ் ம‌க்க‌ளைக் க‌ஷ்ட‌ப் ப‌டுத்திய‌ போது எல்லாம் அவ‌ர் மீது ஒரு துரும்பு கூட‌ப் ப‌ட‌வில்லை.ஆனால் அங்கு வ‌ள‌ர்ந்து வ‌ந்த ஒரு ம‌லையாள ர‌வுடி வெங்க‌டேச‌ப் ப‌ண்ணையாருட‌ன் ஆணவத்தோடு மோத,'த‌மிழ் நாட்டுக்குப் பொழைக்க‌ வ‌ந்த நாயிங்க‌. என் கிட்டயே மோதறீங்களா?" என்று வெகுண்டெழுந்து அந்த கும்பலைப் புரட்டி எடுக்க... அந்த ர‌வுடி கேர‌ளாவில் உள்ள ஒரு முக்கிய‌ப் புள்ளிக்கு பொன் செய்ய‌,அப்போது த‌மிழ‌க‌ ஆளுன‌ராக இருந்த ஊழல் குந்தாணி மலையளத்தி பாத்திமா பீவியிடம் அந்த முக்கிய‌ப் புள்ளி ம‌ந்திர‌ம் ஓத‌ , ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ 48 ம‌ணி நேர‌த்தில் வெங்க‌டேச‌ப் ப‌ண்ணையார் என்க‌வுண்ட‌ரில் தூக்க‌ப் ப‌ட்டார்.புரிந்து கொள்ளுங்க‌ள்.

ஐக்கிய அரபு நாடுகளில் வேலை செய்கிற தென் தமிழ் நாட்டுக்காரர்கள் விமானம் மூலம் தாயகம் வரும்போது திருவனந்தபுரம் வழியாக வருவதுதான் பக்கம்.எளிது.ஆனால் அப்படி வந்திறங்கும் தமிழர்களிடம் திருவனந்த புரம் விமான நிலைய மலையாளிகள் செய்கிற தொந்தரவு ,"எதுக்கு இங்க வந்து இறங்குற ? சென்னை போய் இறங்க வேண்டியதுதான?" என்று கிண்டல் செய்வது... இவர்களுக்குப் பயந்தே பலர் நேரமும் செலவும் அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்று சென்னை வந்தே இறங்குகின்றனர்.
ஆனால் ஒவ்வொரு ம‌லையாளிக்கும் சென்னைக்கு வ‌ந்து எந்த‌த் 'தொழில்' செய்தாவ‌து முன்னேற‌ வேண்டும் என்று ஆசை.
பொதுவாக‌ புதிய மண்ணுக்குப் பிழைக்க‌ப் போகும் யாருக்கும் எப்ப்ப‌டிப் பிழைக்க‌ப் போகிறோமோ என்ற பய‌ம் வ‌ருவ‌து இய‌ல்புதான்.
ஆனால் புதிதாக‌த் த‌மிழ் நாட்டுகுப் பிழைக்க‌ வ‌ருகிற ஒவ்வொரு ம‌லையாளியின் க‌ண்ணிலும் ஒரு பீதியைப் பார்க்கலா‌ம்,' ந‌ம‌து மாநில‌த்தில் நாம் த‌மிழ‌னைப் ப‌ல‌வாறு கேலி செய்து இருக்கிறோமே..இங்கே என்ன ப‌தில் கிடைக்குமோ ' என்ற‌ பீதி. ஆனால் மூணு நாலு மாத‌த்தில் த‌மிழ‌ன் சூடு சுர‌ணை இல்லாத‌ வெட்க‌ங்கெட்ட‌ ஜென்ம‌ம் என்ற உண்மை புரிந்துவிடும்.அப்புற‌ம் பாருங்க‌ள் ஆட்ட‌த்தை.

தனது ஊரில் இருந்து ஆட்களைத் தொடர்ந்து இறக்குமதி செய்வது..இடம் வாங்கி வீடு கட்டி மலையாளிக்கு மட்டும் வாடகைக்கு விடுவது..முடியாத சூழலில் தமிழனுக்கு மட்டும் அதிக வாடகை என்பது..விற்பனை செய்தாலும் இதே கொள்கை.

மலையாளியான எம்.ஜி.ஆர்.தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த போது தன்னை 'வாழ வைத்த தெய்வங்களான'தமிழக மக்களுக்கு ஓரளவு நன்றியோடு இருந்தது உண்மைதான்.ஆனால் மலையாளிகளாக இருந்து அதிமுக உறுப்பினர் கார்டும் வைத்திருந்த பல பேரை தகுதி எல்லாம் பார்க்காமல் காவல் துறையில் வேலையை அள்ளிக் கொடுத்து விட்டார்.அது அவர் தமிழ் நாட்டுக்குச் செய்த துரோகம்தான். இதோ.. இப்போது கோவையின் பெருமையாகக் கருதப் படும் சிறுவாணி ஆற்றின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் விளையாட ஆரம்பித்து விட்டது கேரளா..!
இப்படியாக .... கேரளாவில் தமிழனைப் பிழைக்க விடக் கூடாது. ஆனால் தமிழ் நாட்டை மட்டும் பங்கு போட்டுத் தின்று கொழுக்க வேண்டும் என்பது மலையளிகளின் பேராஆசை. இத‌ற்கு எல்லாம் வினையாக‌ வ‌ந்த‌வ‌ர் பிர‌பாக‌ர‌ன்.
தமிழ் ஈழம் அமைந்தால் தமிழ் உணர்வு பீறிடும். அதன் பாதிப்பு தமிழ் நாட்டிலும் வளரும்.தமிழ் நாட்டிலும் தமிழ் உணர்வு வளர்ந்தால்,பிறகு கேரளாவில் இருந்து தமிழனை விரட்ட வேண்டும்;அதே நேரம் தமிழ் நாட்டிலேயே தமிழனை ரத்தம் உரிஞ்சும் அட்டை போல உறிஞ்சிப் பிழைத்து இங்கேயே தமிழனை அடிமையாக்கி ஆலவட்டம் போட ஆசைப் படும் மலையாளிகளின் கனவு பலிக்காமல் போய்விடும்.
அதனால்தான் ஈழம் மலரக் கூடாது பிரபாகரன் மீளக்கூடாது என்பதில் மலையாளிகள் உறுதியாக இருக்கிறார்கள்.இந்திய அரசில் அதற்கேற்ற எல்லாப் பதவிகளையும் வாங்கிக் கொள்கின்றனர்.

இதோ இரண்டாம் முறையாக ராணுவ அமைச்சராக வந்துள்ள அந்தோணி ஒரு மலையாளி.தேசிய பாதுகாப்புச் செயலாளர் எம்.கே. நாரயணன் மலையாளி.வெளியுறவுத்துறைச் செயலளர் சிவ சங்கர மேனன் மலையாளி.
இது ம‌ட்டுமா? இந்த விவ‌கார‌ம் க‌டைசியாக‌ப் போகிற ஐ.நா.ச‌பை பான்‍கிமுனின் செய‌லாளாராக‌ இருக்கிற விஜய் நம்பியார் ஒரு மலையாளி. இந்த‌ விஜ‌ய் ந‌ம்பியாரின் த‌ம்பியான‌ ச‌திஷ் ந‌ம்பியார் எங்கே வேலை செய்கிறான் தெரியுமா? இல‌ங்கை ராணுவ‌த்தின் ஆலோச‌க‌ர் வேலை.
எப்ப‌டி ஒரு நெட் வொர்க் பாருங்க‌ள்.

ஆக‌ ,த‌மிழ‌னுக்கு எதிரான‌ ம‌லையாளிகளின் உல‌க‌ளாவிய‌ ச‌தியின் ஒரு அங்க‌மாக‌த்தான் இல‌ங்கை சென்று ராஜ‌ப‌க்ஷேவிற்கு சுடுகாட்டில் வேலை செய்து வ‌ந்திருக்கிறார்க‌ள்,எம்.கே.நாராயண‌ன், சிவ‌ ச‌ங்க‌ர‌ மேன‌ன் என்ற இந்த‌ இரு ம‌லையாள வெட்டியான்க‌ளும்!

தமிழர்களே! இதற்கு மேலும் நீங்கள் உண்மைகள் புரியாமல் இருந்தால்‍‍‍‍‍‍................................... (நீங்களே எழுதிக் கொள்ளுங்கள், இந்த‌க் க‌ட்டுரையின் க‌டைசி வ‌ரியையும் உங்க‌ள் த‌லை எழுத்தையும்!)






பிடீ சாபம்!!! தோற்றது சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் அணி !



கல்வி , கலை , விளையாட்டு ,தொழில் எதுவானாலும் போட்டி என்று வந்துவிட்டால் ... எனது ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் போட்டி என்றால் எனது ஊர் ஜெயிக்க வேண்டும் என்றும் , எனது தாலுக்காவிற்கும் இன்னொரு தாலுக்காவிற்கும் போட்டி என்றால் எனது தாலுக்கா ஜெயிக்க வேண்டும் என்றும் ,
இப்படியே மாவட்டம் , மாநிலம் , பிரதேசம், நாடு ,பிராந்தியம் , கண்டம்,உலகம் என்று விரிந்து.... எனது பூமிப் பந்துக்கும் இன்னொரு கிரகத்துக்கும் போட்டி என்று வந்தால் எனது புவிக் கிரகமே வெல்ல வேண்டும் என்று ஆசைப் படுகிற ,ஒரு சாதாரண மனிதப் பிறவிதான்
ஆனாலும் ஐ.பி.எல் பருவம் இரண்டில் , சென்ற வருடம் போல இறுதிப் போட்டிக்குக் கூடப் போகாமல் ,அரை இறுதியிலேயே சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் அணி தோற்ற‌போது ஒரு துளி கூட‌ நான் வ‌ருத்த‌ப் ப‌ட‌வில்லை. அமைச்ச‌ர் ப‌த‌விப் ப‌ங்கீட்டில் க‌ருணா நிதியின் தோல்வியும் ஐ.பி.எல் .போட்டியில் சென்னை சூப்ப‌ர் கிங்சின் தோல்வியும் மிக‌வும் நியாய‌‌ம்.

கார‌ணம் அத‌ன் பின்னால் இருக்கிற‌து த‌மிழ் உணர்வாள‌ர்க‌ளின் சாப‌ம்! இல‌ங்கையில் த‌மிழ் இன‌த்தை முற்றாக‌ அழிக்கும் (அ)ராஜ‌(க‌) ப‌க்ஷேவின் செய‌ல்பாடுக‌ளால் அந் நாட்டுட‌னான‌ எல்லா உற‌வுக‌ளையும் துண்டிக்க‌ வேண்டும் என்று க‌ருத்து வ‌ந்த‌ போது அதில் கிரிக்கெட்டும் ஒரு கார‌ணியாக‌ வ‌ந்த‌‌து. மும்பைத் தாக்குத‌லில் பல‌ர் இறந்தத‌ற்காக‌ பாகிஸ்தானுட‌ன் கிரிக்கெட் ஆட‌க் கூடாது என்று எழுந்த‌ குர‌லுக்கு ம‌திப்ப‌ளித்து ந‌ம் அணி அதை ந‌டைமுறைப் ப‌டுத்திக் கொள்ளவும் செய்ய‌ வைக்க‌ப் ப‌ட்ட‌து.

அதே வ‌கையில் ஈழ‌த்தில் த‌மிழ் இன‌த்தை அழிக்கும் இல‌ங்கை அர‌சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வ‌கையில் இல‌ங்கையுட‌னும் கிரிக்கெட் ஆட‌க் கூடாது என்று க‌ருத்துருவாக்க‌ம் எழுந்த‌து.ஆனால் அது இந்தியாவின் பிர‌ச்னை இல்லையே என்ற‌ன‌ர் ந‌ம‌து தேசிய 'வியாதிக‌ள்'!
"அப்ப‌டியா..பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய மும்பைத் தாக்குதால்ல‌ இறந்த‌ இந்திய‌ர்க‌ளை விட‌ , சிங்க‌ள ராணுவ‌க் கொடுங்கோல் வாதிக‌ளால் இற‌ந்த‌ இந்தியர்க‌ள் அதிக‌ம் இல்லியா? அத‌னால இல‌ங்ககையையும் புற‌க்க‌ணி .அவ‌ன் உயிர்தான் ச‌க்க‌ரைக் க‌ட்டி. த‌மிழ்னாட்டு இந்திய‌ன் உயிர் செங்க‌ ம‌ட்டியா?"என்று கேட்ட‌ போது ஒரு ப‌ய‌லும் வாய‌த் தொறக்க‌ல‌.
'சரி...இந்திய‌ கிரிக்கெட் வாரிய‌த்துல‌ முக்கிய‌ப் ப‌ங்கு வ‌கிப்ப‌வ‌ரும் சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் அணியின் உரிமையாள‌ருமான‌ இந்தியா சிமெண்ட்ஸ் அதிப‌ர் சீனிவாச‌னிட‌ம் கேட்ட‌ போது ரொம்ப‌ ப‌ந்தாவா "அதுக்கும் இதுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்(!). நாங்க‌ளும் த‌மிழ‌ர்க‌ள்தான்(அப்ப‌டியாஆஆஆ?) என்றார்.

என்ன‌ கொடுமை சீனிவாச‌ன்!

(இல‌ங்கையில ல‌ட்ச‌க் க‌ண‌க்கா த‌மிழ‌ன் , அநியாய‌மாச் சாகிறான்.இனிமேயாச்சும் அவ‌ன் ந‌ல்ல‌ இருக்க‌ணும்னு பிரார்த்த‌னை ப‌ண்ண‌ச் சொல்லி ஒரு ப‌ய‌லும் எஸ்.எம்.எஸ்.ப‌ண்ண‌ல‌. ஆனா இந்த‌ ஆட்ட‌த்துல‌ சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் தோத்துப் போச்சுன்னா அப்புற‌ம் சீனிவாச‌ன் தெருவுக்கு வ‌ந்துருவார் .. தோனி பிச்சை எடுப்பாருன்னு ப‌ய‌ந்து , ந‌ம்ம‌ த‌றுத‌லைப் புள்ளைங்க‌ pray for chennai super kings அப்ப‌டின்னு sms அனுப்பிக் க‌ட‌ந்த‌ ஒரு மாச‌மா க‌த‌றிக் கிட்டுக் கிட‌ந்த‌து பாருங்க‌ .. அந்த‌க் க‌ரும‌த்துக்காக‌வே இந்த அணி ம‌ண்ணக் க‌வ்வ‌ணும்னு தோணுச்சி.இது ஒரு த‌னி விவ‌கார‌ம்.)
ச‌ரி சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் அணியில அணி முத்தையா முர‌ளித‌ர‌னைச் சேத்திருக்காறேன்னு ச‌ந்தோஷ‌ப் ப‌ட‌லாம்னு பார்த்தா.. துஷ்ரான்னு ஒரு சிங்க‌ளனையும் சேர்த்து த‌ன்னோட‌ த‌மிழ்ழ்ழ்ழ்ழ் உணர்வ‌ காட்டினாரு.அவ‌ன் என்ன‌டான்னா சென்னை அணி கொடியில‌ இருந்த‌ சிங்க‌த்து ப‌ட‌த்த த‌ன்னோட‌ நாட்டுக் கொடியில‌ இருக்கிற (அ)சிங்க‌த்துப் ப‌ட‌மா நென‌ச்சுப் புல்ல‌ரிச்சுக் கிட்டுக் கிட‌ந்திருக்கான்.
சீனிவாச‌னின் இந்த‌ துரோக‌ங்க‌ளுக்காக‌வே இந்த‌ அணி ம‌ண்ணக் க‌வ்வ‌ணும்னு ஆசைப் ப‌ட்டாங்க‌ , உண‌ர்வுள்ள‌ ப‌ல‌பேரு.அப்ப‌டியே ஆன‌துல‌ ச‌ந்தோஷ‌ம்தான் ந‌ம‌க்கு .

கேட்கலாம்..."அட‌ப் போங்க‌ .. இப்ப‌ தோத்துப் போனதால‌ நீங்க‌ளே சொன்ன‌ மாதிரி சீனிவாச‌ன் தெருவுக்கு வ‌ர‌ப் போறாரா? இதுக்குப் போயி இவ்வளவு சந்தோஷப் படறீங்களே..."ன்னு .

நமக்கு எதுக்குங்க அப்படி ஆசைப் படுற பாவம்.
சீனிவாசனுக்குப் பணம் ஒரு பிரச்னை இல்லைதான். ஆனா கடைசி நாலு ஓவர்ல ஜெயிப்போம்னு நம்பி "ஓஓஓஓ...."ன்னு கத்தி சந்தோஷம் எல்லாம் பட்டு கடைசியில (கொஞ்சம் பணம் நஷ்டமாவதையும் நினைச்சு நொந்து போனார் இல்ல.. அதான் அவருக்கான தண்டனை . நியாயம் விட்ட சாபம் பலிச்சது.
இவ‌ருக்கு சாப‌ம் இப்ப‌டி த‌ண்டனை கொடுத்த‌து .
இதுக்க்க்க்க்க்கே இப்ப‌டின்னா...

ராஜ பக்ஷே, ங்கோத்தா பய ராஜ பக்ஷே, சரத்து பொன்சேகா,எம்.கே. நாராயணன் , சிவசங்கர மேனன் , பிரணாப் மூகர்ஜி,தங்க பாலு , ஈ.வி.கே.எஸ்.எளங்கோவன் ,சுதர்சனம் தாத்தா,சோனியா காந்தி , கருணாநிதி இவங்களுக்கு எல்லாம் எப்படி பலிக்குமோ..... நெனச்சாலே நடுக்குதுப்பா!

Thursday, May 21, 2009

பிரபாகரன் மரணம் -‍ தமிழக காங்கிரசார் கதறல்

பிரபாகரன் மரண(?) செய்தியால் உலகெங்கும் உள்ள - மொழிகளைக் கடந்த இன விடுதலை ஆதரவாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் போர்க்களத்தில் மகனை இழக்கத் துணிந்த நிஜமான தியாக வீரம் கண்டு உலகம் முழுக்க உள்ள மனிதாபிமானிகளும் வருத்தப் படும் வேளையில்,

தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் மற்ற அனைவரையும் விட அதிகமாக கண்ணீர் விட்டு கதறிக் கொண்டுள்ளனர் என்பதை அறிந்து வியந்து அது பற்றிக் காரணம் கேட்டபோது ....

த‌ங்க‌பாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவ‌ன்,வேலூர் ஞான‌சேக‌ர‌ன்,மணி சங்கர அய்யர், சுத‌ர்ச‌ன‌ம், ஹ‌ச‌ன் அலி,பீட்ட‌ர் அல்போன்ஸ்,போன்றோர் ( ப‌.சித‌ம்ப‌ர‌ம் அங்கு இல்லை என்ப‌தை நாம் ம‌றைக்க‌ விரும்ப‌வில்லை) அழுத‌ க‌ண்ணீரூம் சிந்திய‌ மூக்கும், நீர் ஒழுகும் வாயும் க‌ச‌ங்கிய‌ கன்ன‌மும் சிவ‌ந்த‌ க‌ண்க‌ளுமாக‌ கூறிய‌தாவ‌து..


"அந்த‌ கொடுமைய‌ ஏன் த‌ம்பி கேட்குறீங்க‌.. உங்க‌ளுக்கு விச‌ய‌ம் முழுசா புரிய‌ணும்னா முத‌ல்ல எங்க‌ள‌ப் ப‌த்தி நீங்க‌ தெரிஞ்சுக்க‌ணும்.. எங்க‌ள்ள‌ முக்கிய‌மான‌ சில‌ பேரோட‌ தாய்மொழி த‌மிழே இல்ல... க‌ன்ன‌ட‌ம் , துளு,தெலுங்கு,உருது இப்ப‌டிப் ப‌ல மொழிக‌ள்.சில‌ருக்கு தாய்மொழி த‌மிழ்தான். ஆனா அவ‌ங்க‌ எல்லாம் சுய‌ ந‌ல‌த்துக்காக தாயையும் தாய்மொழியையும் மொழி இன‌த்தையும் விலைபேசி டில்லிக்குக் காவ‌டி தூக்க‌த் த‌ய‌ங்காத‌வ‌ங்க‌... எங்க‌ளுக்கு இருக்கிற மூக்கிய‌ ஒற்றுமையே.. த‌மிழ் த‌மிழ‌ன் எப்ப‌டிப் போனாலும் நாங்க‌ வ‌யிறு வ‌ளர்க்க‌ணும். ரொம்ப‌ இக்கட்டான‌ சூழ‌ல்ல‌ , எப்ப‌டி மாய்மால‌ம் ப‌ண்ற‌துன்னு சொல்லித் த‌ர‌ அண்ண‌ன் க‌லைஞ‌ர் இருக்காரு..


காம‌ராஜ‌ருக்கே குழி ப‌றிச்ச‌ அப்புற‌ம் பொதுவா எங்க‌ளுக்கு தமிழ் நாட்டுல நிஜ‌மான‌ ம‌ரியாதைன்னு ஒரு ம‌ண்ணும் இல்ல‌...டில்லியிலும் வெட்டிப் ப‌ச‌ங்க‌ன்னு க‌ண்டுக்க‌ மாட்டாங்க‌...வேற‌ ஒண்ணும் இல்ல‌ த‌ம்பி ....' ந‌ம்ம‌ சொல்றத‌க் கேட்டு தாய் மொழி இன‌த்துக்கும் சொந்த‌ மாநில‌த்துகும் குழி ப‌றிக்கிற‌ ப‌ச‌ங்க‌ , நாளைக்கு வேற‌ யார் பேச்சையாவ‌து கேட்டு ந‌ம்ம‌ளுக்கே குழி பறிச்சாலும் பறிப்பாங்க ' அப்படிங்கறதுதான் டில்லிக்காரங்க பயம். நாங்க‌ டில்லிய‌ கேட்காம‌ த‌மிழ் நாடு காங்கிர‌ஸ் கட்சி ஆபீஸ்ல‌ ஒண்ணுக்கு கூட‌ போக‌ முடியாது.


பொதுவா த‌மிழ் நாட்டுல‌ இப்ப‌ப் பொற‌ந்த‌ க‌ட்சிக‌ளோட‌ க‌டைசித் தொண்ட‌ன் கூட க‌ட்சி லெட்ட‌ர் பேடுல‌ சுய‌மா நாலு வார்த்தை எழுதி ப‌த்திரிக்கை ஆபீஸ்க்கு அனுப்புவான்.ஆனா நாங்க எத‌ எழுதினாலும் அதிமுக‌ வும் (முன்ன‌ எல்லாம்)திமுக‌வும் கோவிச்சுக்கும். உட‌னே டில்லியில‌ இருந்து எங்க க‌ட்சித் த‌லைமை எச்சில் துப்பி அத‌ எங்க‌ளுக்கு பார்ச‌லா அனுப்பி வைக்கும்.

அத‌னால க‌ட‌ந்த‌ சில த‌லைமுறைக‌ளா நாங்க சுய‌மா ஒரு புள்ளி க‌மா கூட‌ யோசிச்ச‌து இல்ல‌..

த‌ம்பி .. வெளிய‌ சொன்னா வெக்க‌ம்; அழுதா துக்க‌ம் ..இருந்தாலும் சொல்றோம் ...

க‌ட்சியில எங்க‌ பேருல அச்ச‌டிகிற‌ லெட்ட‌ர் பேடையெல்லாம் எங்க வீட்டுப் பொம்ப‌ளைங்க‌..(அட‌ , ஆமாங்க‌ .. சின்ன‌ பெரிய‌ வீட்டுப் பொம்ப‌ளைங்க ரெண்டு பேரையும் சேர்த்துதான் சொல்றோம்...இல்ல‌னா.. அப்புற‌ம் 'அங்க‌' நுழைய‌ முடியாது..)ஆங்....எங்க‌ வீட்டுப் பொம்ப‌ளைங்க இஸ்திரிக்கார‌ன் க‌ண‌க்கு எழுத‌வும் , பால் க‌ண‌க்கு எழுத‌வும்,மார்கழி மாசம் கோலம் போடவும்தான் யூஸ் பண்ணுவாங்க.. வேலைக்கார‌ர்க‌ள் கூட தண்ணி வ‌ர‌ல‌ன்னா டாய்லெட் ல‌ யூஸ் ப‌ண்றாதப் பார்த்தும் பாக்காம‌ த‌லையத்‌ திருப்பிக்குவோம்.அதையும் மீறி மிச்ச‌ம் இருந்தா ப‌ழைய‌ பேப்ப‌ர்க‌டையில‌ போட்டுடுவாங்க‌. டாய்லெட் விச‌ய‌ம் தெரிஞ்ச‌ அப்புறம் அவ‌ங்க‌ளும் எங்க‌ லெட்ட‌ர் பேட‌ வாங்க‌ற‌து இல்ல‌...


இப்ப‌டியே எங்க‌ கால‌ம் தீவ‌ட்டித் த‌ண்ட‌மா போயிக்கிட்டு இருந்த‌து.எங்க‌ வீட்டு வாச‌ல்ல நாங்க‌ பார்த்து க‌ட்டிப் போட்ட‌ நாய் கூட‌ எங்க‌ள ம‌திக்காத‌ நிலைய‌ நினைச்சு நாங்க‌ எல்லாம் ராத்திரி ப‌னிரெண்டு ம‌ணிக்கு மேல போர்வைய‌ போத்திகிட்டு ச‌த்த‌ம் இல்லாம‌ அழுவோம் . ந‌ம்ம‌ள‌க் காப்பாத்த‌ ஒரு தேவ‌ தூத‌ன் எப்ப‌ வ‌ருவான்னு காத்திருனந்தோம் .


அப்ப‌தான் எங்க‌ள‌க் காப்பாத்த‌ - சினிமாவில‌ எம்.ஜி.ஆர் . வ‌ர்ற மாதிரி வ‌ந்தார் , சுத்த‌மான‌ ர‌த்த‌த்துக்குப் பிறந்த அந்த மாவீரன் பிரபாகரன்.


ராஜிவ்காந்தி ம‌ர‌ண‌த்துக்குப் பிற‌கு எங்க‌ளுக்கு ஒரு அற்புதமான‌ பிழைப்பு கிடைச்ச‌து .

முத‌ல் காரிய‌மா எங்க‌ லெட்ட‌ர் பேடுக‌ளை எங்க‌ளுடைய‌ பொம்ப‌ளைங்க‌ கிட்ட‌ இருந்து மிட்டோம்.


பிதாம‌க‌ன் ப‌ட‌த்துல விக்ரம்,திடீர் திடீர்னு த‌லைய‌ 45 டிகிரி கோண‌த்துல‌ சாச்சிக் கிட்டு,"உன்னையே நீ எண்ணிப் பாரு "ன்னு பாடுவார் பாருங்க‌.. அந்த‌ மாதிரி திடீர் திடீர்னு லெட்ட‌ர் பேட‌ எடுத்து " ராஜிவ் காந்திய‌க் கொன்ன பிர‌பாக‌ர‌ன ம‌ன்னிக்க முடியாது .. ராஜிவ் காந்திய‌க் கொன்ன விடுத‌லைப் புலிக‌ளை ம‌ன்னிக்க முடியாது .. "ன்னு .. அவ‌ங்க‌ எதோ எங்க‌ கிட்ட‌ வ‌ந்து ம‌ன்னிக்க‌ச் சொல்லிக் கெஞ்சின‌ மாதிரி ... தின‌ச‌ரி மூணு த‌ட‌வை எழுதி எழுதி ப‌த்திரிக்கை ஆபிஸ்க்கு அனுப்புவோம்.


எங்களை மாதிரியே டில்லியில உப்புக் கெட்ட சோறு வாங்கித் திங்கிற‌ சில‌ துப்புக் கெட்ட ப‌த்திரிக்கைகள் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து போடும். சில‌ச‌மய‌ம் நாங்க‌ ம‌றந்துட்டாக் கூட , அவ‌ங்க‌ளே ஞாப‌க‌ப் ப‌டுத்திக் கேட்பாங்க‌. நாங்க‌ளும் கொஞ்ச‌ம் கூட‌ ச‌லிக்காம ம‌றுப‌டியும் ம‌றுப‌டியும் அதையே எழுதி அனுப்புவோம்.ஜெராக்ஸ் எடுத்து அனுப்பினா டில்லி கோவிச்சுக்குமோங்க‌ற‌ ப‌ய‌ம்தான்.


சொன்னா ந‌ம்ப‌மாட்டீங்க‌ த‌ம்பீ.. இந்த‌ அப‌த்த‌ ப‌ஜ‌னையை நாங்க‌ ஆர‌ம்பிச்ச‌ அப்புறம்தான் ,எங்க‌ள மாதிரி சில‌ ஜ‌ந்துக்க‌ள் உயிர் வாழ‌ற‌தையே டில்லி ஒத்துக்குச்சி.


நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய‌ ச‌லுகைக‌ளும் கொடுத்துச்சி டில்லி.சொன்னா ந‌ம்ப‌ மாட்டீங்க‌.. க‌ட்சி ஆபீஸ்ல உள்ள ஒண் பாத்ரூம் ரூமை டில்லியோட பர்மிஷன் இல்லாமலேயே பயன்படுத்திக்கலாம்கற பெரிய உரிமையையே கொடுத்தது டில்லி.‌


அது ம‌ட்டுமில்ல.. எங்க‌ திருவோடுக‌ளிலும் சில்ல‌றை ம‌ட்டும் இல்லாம‌ல் நிறைய‌ ப‌ண‌க் க‌ட்டுக‌ளையும் போட்டது டில்லி.வீட்டுப் பொம்பளைங்க காலைல எழுந்ததும் கேட்காமலே காப்பி எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சாங்க. நாங்களும் மனுசப் பிறவிகளா மதிக்கப் பட்டோம்

. உண்மைய‌ச் சொல்றோம் த‌ம்பீ.. ராஜிவ் காந்தி செத்த‌ அப்புறம்தான் நாங்க‌ பொழைச்சோம். ஆனா எங்க‌ளப் பொழைக்க வ‌ச்ச‌து பிர‌பாக‌ர‌ன்.


ராஜீவ் கான்திய‌க் கொன்ற பிர‌பாக‌ர‌னை ம‌ன்னிக்க‌ முடியாதுன்னு இன்னும் ரொம்ப‌ கால‌த்துக்கு கீழ்ப்பாக்க‌த்துப் பாட்ட‌ப் பாடி .. எதோ க‌லைஞ‌ர் குடும்ப‌ம் அள‌வுக்கு 19 த‌லைமுறைக்கு சொத்துச் சேர்க்க‌ முடியாட்டியும் ஒரு 9 த‌லைமுறைக்காவ‌து சொத்துச் சேக்க‌லாம்னு க‌ணக்குப் போட்டோம்.


ஆனா இந்த‌ப் பிர‌பாகர‌ன் எங்க‌ மேல‌ கொஞ்ச‌ம் கூட‌ க‌ருணை இல்லாம திடீர்னு செத்துப் போயிட்டாரு.


இப்ப‌ ம‌றுப‌டியும் எங்க‌ளோட சாக்க‌டைக் கால‌ம் தொட‌ங்கிருச்சி த‌ம்பீ..



லெட்ட‌ர் பேடை எல்லாம் எங்க‌ வீட்டுப் பொம்ப‌ளைங்க கைப்ப‌ற்றிட்டாங்க‌!கேட்டா,"அந்த‌ வீரபுருஷந்தான் செத்துட்டாரே .. இனிமே உனக்கு எதுக்குய்யா லெட்டர் பேடு? நாளைல‌ இருந்து ம‌ரியாதையா காலைல‌ எழுந்து காப்பி போடற வேலையப் பாருன்னு சொல்லிட்டாங்க... அட‌ ஒரு நினைவுச் சின்ன‌மா இருக்க‌ட்டுமேன்னு ஆளுக்கு ஒரு க‌ட்டு லெட்ட‌ர் பேட த‌னியா எடுத்து வ‌ச்சிருந்தொம்...அதையும் எங்க வேலைக்கார‌ங்க‌ எடுத்துட்டுப் போயி .. அவுட் ஹ‌வுஸ்ல‌ அவ‌ங்க‌ளுக்குன்னு இருக்க‌ற டாய்லெட்ல வச்சு யூஸ் பண்றாங்க .. அதுலயும் ஒரு பாதிய மாந‌க‌ராட்சிக் கட்டணக் கழிப்பிடத்துக்கு இலவசமா ... உபயம் னு எங்க‌ பேர‌ப் போட்டுக் கொடுத்துட்டானுங்க‌ .


டில்லியில‌ க‌ருணாநிதிக்கே மந்திரிப் பதவியில த‌ண்ணிக் காட்டிட்ட‌ எங்க இத்தாலி அன்னை, இனி செருப்பத் தூக்கக் கூட எங்க‌ள அனும‌திக்காது.இனி எங்க‌ த‌ட்டுல‌ டில்லியில‌ இருந்து சில்ல‌றை கூட‌ விழுவாது.எங்க‌ பொழைப்பே இப்ப‌டி திடீர்னு ம‌ண்ணாப் போச்செ!


இதுக்கெல்லாம் கார‌ணம் அந்த‌ மாவீர‌ன் பிர‌பாக‌ர‌ன் செத்த‌துதான‌..


ப‌.சித‌ம்ப‌ர‌ம் ம‌ட்டும் ஜெயிச்ச‌தால‌ த‌ப்பிச்சிட்டாரு .. அவ‌ருக்கு 'சின்ன‌‌ வ‌ய‌சுல'இருந்தே க‌ணக்கும் படிச்ச பிறகு வ‌ழ‌க்கும் ந‌ல்லா தெரியும்.அவ‌ருக்கு இனிமே பிர‌பாக‌ர‌ன் தேவை இல்ல..


ஆனா நாங்க‌ அப்ப‌டியா.. ? பிர‌பாக‌ர‌ன் இல்லாம‌ நாங்க‌ இனி எப்ப‌டி வ‌யிறு வ‌ள‌ப்போம்? இதையெல்லாம் பிர‌பாக‌ர‌ன் யோசிச்சிருக்க‌ வேண்டாமா?


நியாய‌த்த‌ நீங்க‌ளே சொல்லுங்க‌.

நம்புன‌ எங்க‌ள ந‌ட்டாத்துல விட்டுட்டு ..பிர‌பாக‌ர‌ன் இப்ப‌டி சாக‌லாமா? இது நியாய‌மா? த‌ர்ம‌மா அடுக்குமா?


எல்லாரும் சொல்ற மாதிரி அவ‌ரு உயிரோட‌ வ‌ந்து எங்க‌ள ம‌றுப‌டியும் வாழ‌ வைக்கணும்னு நாங்க‌ குடும்ப‌த்தோட‌ குல‌ தெய்வ‌ம் கோயில்ல‌ மொட்டை போட‌ப் போறோம் த‌ம்பீ.. இத‌ விட‌ எங்க‌ளால‌ வேற என்ன‌ செய்ய‌ முடியும் த‌ம்பீ... "


-- என்று கத‌றி அழுத‌தைப் பார்த்த‌போது ந‌ம‌க்கே ரொம்ப‌ப் ப‌ரிதாப‌மாக‌த்தான் இருந்த‌து.

Wednesday, May 20, 2009

மாவீரன் பிரபாகரனின்மாபெரும் வெற்றி!

அது பிரபாகரனின் உடல்தானா? எப்படி வாழ்ந்தபோது இருந்ததை விட செத்த பின்பு ஒருவன் இளமையாக முடியும்?

தன்னைச் சுட சிங்களன் வந்த போது , " இரு மொழுமொழுவென்று சவரம் செய்து கொண்டு வருகிறேன்.." என்று சொல்ல பிரபாகரன் என்ன சிங்களன் போல பைத்தியமா? அடையாள அட்டையையும் வில்லையையும் கூடவே வைத்திருப்பரா?.....

கேட்டுக் கொண்டே போக‌ இப்ப‌டி ப‌ல‌ நியாய‌மான‌ கேள்விக‌ள் உள்ள‌ன‌.

பி.பி.சி. போன்ற உலக ஊடகங்கள் எல்லாம் பிரபாகரனை ஒரு மாவீரனாக‍‍ சுதந்திரப் போராட்ட வீரத் தலைவனாக மனசாட்சியோடும் நல்ல ரத்தம் தங்களுக்குள் ஓடுவதை நிருபிக்கும் வகையிலும் விவரிக்க,

மலத்தை உணவாக உண்டு மாரடித்தபடி , பிரபாகரனைத் தீவிரவாதி பயங்கரவாதி என பொய்யாய் நிறுவ மூச்சைப் பிடித்து முட்டியை உடைத்துக் கொள்ளும் சி.என்.என் .ஐ.பி.என்., டைம்ஸ் நவ், என்.டி.டி.வி.போன்ற குப்பைத் தொட்டி டி.வி.க்கள் பிரபாகரன் மரணம் பற்றி எழுப்பும் கேள்விகளூக்கே பதில் சொல்ல முடியாமல் ......

சிங்கள ராணுவ அரைக் கிறுக்கு அபத்தங்கள் பதில் சொல்ல முடியாமல் தடுமாறியதை நேரடி ஒளிபரப்பில் காண முடிந்தது.

பொய்யை எப்படி நம்புகிற மாதிரி சொல்வது என்று கற்றுக் கொடுக்கத்தான் , அணு ஆயுத ஒப்பந்தம் மூலம் இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்த அயோக்கியசிகாமணி எம்.கே .நாராயணன் , கருணாநிதியின் கையைத் தன் தலையில் வைத்து வணங்கி ஆசி பெற்று வணங்கி , கொழுப்போடு கொழும்புக்குப் போயிருக்கிறார்.

இதோ, இதை நான் எழுதிக் கொண்டு இருக்கும் இந்த நொடியில் , இலங்கைப் போர்க்களத்தில் மதிவதனியம்மா ,தங்கை துர்க்கா, சின்னத் தம்பி ஆகியோரின் பிணமான உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டதாக செய்தி , எழுத்துக்களில் உருண்டு நம் ஈரக் குலையை அறுக்கிறது.

இதுவும் உண்மையோ பொய்யோ..இந்தச் செய்திக்குப் பின்னால் எத்தனை நாடகங்களோ..!

அல்லது பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, மதிவதனி, துர்க்கா , குட்டித் தம்பி உட்பட அனைவருமே சுயந‌லம் இல்லாத தியாகம் மிக்க வீரமரணத்தைப் போர்க்களத்தில் அடைந்திருக்கலாம்.அதன் மூலம் பிரபாகரன் , ராஜபக்ஷே இருவருமே ஒரே மாதிரி ஈகோயிஸ்டுகள்(ஆணவக்காரர்கள்)என்று பிதற்றிக் கொண்டிருந்த வேசிமகன்களின் ஆணவ மூக்கு உடைந்து ரத்தக் களறியாகலாம்.(இந்த உயிர்களில் ஒரு உயிர் உண்மையாகப் போயிருந்தால் கூட பிரபாகரனை ஆணவக்காரர் என்று கூறியவன் பிறப்பை சந்தேகமின்றி சந்தேகப் படலாம்)

எல்லாரும் செத்து இருந்தாலும் கூட .. விடுதலைப் புலிகள் ஒட்டு மொத்தமாய் ஒருவேளை வீழ்ந்திருந்தாலும் கூட ஒரு விசயம் சாத்தியமாகி இருக்கிறது.

அதாவது 'தமிழினம் என்று ஒரு இனம் இருக்கிறது. அதுதான் தான் உலகிலேயே வீரம் மிக்க இனம் ...வேசித்தனம் செய்து மட்டுமே அதை வீழ்த்த முடியும். நேருக்கு நேர் நின்று அதை வீழ்த்த முடியாது என்ற உண்மையும்...

இலங்கையில் அந்த இனம் அநியாயமாக திட்டமிட்டு அழிக்கப்படுகிறது ...அந்த இனத்தின் பக்கம் மட்டுமே நியாயம் இருக்கிறது.. அந்த இனத்திற்கு உதவுவது மனிதாபிமானம் உள்ள உலக நாடுகளின் கடமை.அதைக் காப்பதன் மூலமே அநியாயமான‌அடக்கு முறைக்கு எதிரான சரியான நியாயத்தை கோருகிற தகுதி நமக்கு இருப்பதாக அர்த்தப் படும்' என்று உலகம் மனசாட்சியோடு யோசிக்கிறது .

கடந்த ஆறு மாதங்களில் உருவான நெகிழ்வான மாற்றம் இது.

ஒருவேளை இந்த பிரபஞ்சத்தில் ,பால்வீதியில் இரக்கம் உள்ள குலங்கள்.. அது மனித குலமோ ..அதை விட மேலான குலமோ...இல்லை அதை விட கீழான குலமோ.. நியாயம் என்று ஒன்றைத் தெரிந்த எல்லோரும் எல்லாமும் இந்த சரியான முடிவுக்குதான் வரவேண்டியிருக்கும் என்ற திட்டவட்டம் ஏற்பட்டுள்ளதே ...

இதுதான் மாவீரன் பிரபாகரனும் அவரது இயக்கமும் அடைந்த மாபெரும் வெற்றி!








Tuesday, May 19, 2009

க‌ருணா முத‌ல் க‌ருணாநிதி வ‌ரை .. 16 திசையிலும் துரோக‌ம்



புற நானூறு
புதிராய்ப் போனது.

கலிங்கத்துப் பரணி
கலகலத்துப் போனது.

வஞ்சகம் வலை விரிக்க‌
நயவஞ்சகம் நர்த்தனம் ஆட‌
சூது சுற்றி வளைக்க‌
துரோகம் தூபம் போட
ஒரு சூனிய‌க்காரி சூத்திர‌ம் ப‌டிக்க
‌ கயவர்கள் உன் கண்ணைக் கட்ட
தந்திரம் மந்திரம் போட
பகைமை ப‌ல்லிளிக்க‌ ...


க‌ம்பீர‌ம் க‌விழ்ந்த‌து!
பெருமை பிறழ்ந்த‌து!
தீர‌ம் தீர்ந்த‌து!
த‌ன்மான‌ம் த‌க‌ர்ந்த‌து!
இன‌மான‌ம் இடிந்த‌து!
குல‌மான‌ம் குலைந்த‌து!
த‌மிழ்மான‌ம்
த‌லைகுப்புற‌ விழுந்த‌து!

ஆம்!

வேசிப் பிள்ளைக‌ளின் பித்த‌லாட்ட‌த்தால்
வேலுப் பிள்ளை பிர‌பாக‌ரன் மாண்டான்!

த‌ம்பீ....!
க‌ருணா முத‌ல் க‌ருணாநிதி வ‌ரை..
அப்ப‌ப்பா...!
ப‌தினாறு திசையிலும்
உன‌க்குத் துரோக‌ம்!

இர‌ண்டாம் முறை பிறந்த
க‌ரிகால‌ச் சோழ‌னே!

முத‌ல் முறை நீ பிறந்தபோது
க‌ல்லணை க‌ட்டினாய்!

இர‌ண்டாம் முறை நீ
பிறந்து வாழ்ந்து முடிந்த‌ போது..

ம‌ன்னித்து விடு மாவீரா...!

என்னால் உன‌க்கு
க‌ண்ணீர‌ணைதான்
க‌ட்ட முடிந்த‌து க‌ண்ணாளா..!

நீ உன்னை
மாய்த்துக் கொள்ள முடிவு செய்த‌
அந்த‌ நொடி..
இந்த‌ பூமிப் ப‌ந்தின்
க‌றுப்பு நொடி..!

வீர‌ம் என்றால் என்ன‌வென்று
கேட்கும் நாளைய‌ ம‌னித‌ இன‌த்துக்கு
உன்னைய‌ன்றி யாரை
உல‌க‌ம் கைசுட்டிக் காட்டும்?

த‌மிழின‌மே!
த‌லைவ‌ன் என்ற‌ சொல்லை
பிர‌பாக‌ர‌ன் பிண‌த்தோடு புதைத்துவிடு!

கணிகைத்த‌ன‌த்துக்கு
காவ‌டி எடு.
ப‌ர‌த்தைக் குல‌த்துக்கு
ப‌த‌வி கொடு!
விப‌ச்சார‌ குண‌த்துக்கு
வீணை வாசி!

இன்று
உன் த‌லையில் நீயே
உல்லாச‌மாய்
வைத்துக் கொண்ட‌ கொள்ளி
உத்வேக‌மாய் உன்னை
முழுசாய் எரிக்கையில்
ஆத‌ர‌வாய் வ‌ந்து
அணைப்ப‌த‌ற்கு ...

ஒரு துளி ம‌ழையும்
உன்னை நெருங்குமோ!

த‌விர்க்க‌
வேண்டுமென்றால்
இனியாவ‌து துள்ளியெழு!
துரோக‌க் க‌ளைக‌ளைக்
கிள்ளியெடு.!

நாளைய‌ த‌லைமுறை
ந‌ம் நாய‌க‌னைக் காட்டி
யாரிது என்று ஆவலாய்க் கேட்டால் ...

சா‌க்க‌டைச் ச‌குனிக‌ளுக்கு
எதிராய்ச் சுழ‌ன்ற‌
ச‌ந்த‌ண வீர ‌வாள்
என்று க‌ண்க‌ள் கசிய‌க்
காவிய‌மாய்ச் சொல்லிக் கொடு!





Monday, May 18, 2009

1000 நேதாஜிக்குச் சமமான ஒரு பிரபாகரன்







தலைப்பைப் பார்த்த உடனேயே பிரபாகரனை மட்டம் தட்டுவதற்காகவே "அது எப்படி பிரபாகரனைப் போய் நேதாஜியோடு ஒப்பிடப் போச்சு?அவரது அருமை என்ன பெருமை என்ன அந்தஸ்தென்ன ..." என்று மேட்டிமைத்தனம் காட்டி பின்னூட்டம் எழுத முடிவு செய்து விட்ட மேனாமினுக்கர்கள் இப்போதே வேறு வேலை பார்க்கக் கிளம்பலாம்.இது அவர்கள் படிப்பதற்காக அல்ல.

பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ இந்த நூற்றாண்டின் உலக மகா மாவீரனாக உலகம் பிரபாகரனை அங்கீகரித்து ரொம்ப நாள் ஆச்சு.இதை உண்மையான அறிவாளிகளும் மனசாட்சி உள்ளவர்களும் ஒத்துக் கொள்வார்கள்.

எனவே இந்த தலைப்புக்காகவே அதை எதிர்த்து கூலிக்கு மாரடிக்க காத்து இருந்தால் ... சற்றே விலகி இரும் பிள்ளாய்!
விசயத்துக்கு வருவோம்.

உலகம் எங்கும் உள்ள எல்லா மனித இனங்களும் தம் இனத்தவன் தப்பு செய்தால் கூட அவனை எப்படிக் காப்பாற்றுவது என்றுதான் பார்க்கும்.தன் இனத்தவன் தவறை மூடி மறைக்கத்தான் பார்க்கும்.

ஆனால் தாயகத் தமிழினம்..?

தன் இனத்தவன் உலகின் மிகக் கொடூர கறுப்பு வரலாறாக அழிக்கப் பட்டாலும் பாதிக்கப் படும் நம்மவனுக்கு குரல் கொடுக்க ஆயிரம் நியாயங்கள் இருந்தாலும் அவனுக்காக பூமிப் பந்தின் மற்ற துருவங்கள் குரல் கொடுக்கும்போதும் கூட எதைப் பற்றியும் குரல் கொடுக்காமல் கிரிக்கெட் பார்க்கும்.

தம் இனத்தவனுக்கு ஆதரவாக ஒரு ஓட்டுப் போடச் சொன்னால் கூட , 300 அல்லது 500 ரூபாய்களுக்காக ஓட்டை மாற்றிப் போட்டு... 40 ஆண்டுகளாக எதிரியுடன் வீரமாகப் போராடியவர்களையே தன்னுயிர் தான் மாய்த்துக் கொள்ள வைக்கும். அடுத்த தலைமுறையில் இது நமக்கே கூட நடக்கும் என்ற அறிவு கூட இல்லாமல் தம்மவனையே கழுத்தறுக்கும்.காசுக்கு சோரம் போகும்.

இந்த உண்மையை எடுத்துச் சொன்னால் அதை எதிர்த்து பேச எழுத கூட ஆள் வளர்க்கும்.

எப்படியோ விடுதலைப் புலிகளின் வீர வரலாற்றில் ஒரு பெரும் சோகம். எல்லாம் முடிந்தது.

'பிரபாகரன் உடல் கண்டு பிடிக்கப் பட்டு விட்டது .மரபணு பரிசோதனைக்குப் போய் இருக்கிறது.பிரபாகரனின் ம‌கன் சார்லஸ் ஆண்டனி உட்பட பலரின் உடல் அடையாளம் காணப் பட்டுவிட்டது 'என்றூ என்னென்னவோ உயிரை ஊடறுக்கும் செய்திகள். எது உண்மையாக இருக்கும்?

"வாழ்ந்தாலும் செத்தாலும் இங்குதான் , நான் தப்பி ஓட மாட்டேன் " என்று முன்பே சொன்னபடி பிரபாகரன் களத்தில் உண்மையாகவேமாண்டிருக்கலாம்.

அல்ல‌து பிர‌பாக‌ர‌ன் அடுத்த‌ நிலைப் போராட்ட‌ங்க‌ளுக்காக‌ உயிர் வாழ்வ‌த‌ன் அவ‌சிய‌த்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எடுத்துச் சொல்லி த‌ப்பிக்க‌ வைத்திருக்க‌லாம்.அந்த‌ப் ப‌ய‌ண‌த்தில் அவ‌ர் இறக்கலாம் .

அல்ல‌து ஒரு சாத‌ர‌ண ம‌னித‌னாக‌ வ‌ன்னிக் காடுக‌ளில் ர‌க‌சிய‌மாக‌ வாழ‌லாம்.

உலகம் எங்கும் நிலவும் ஈழ ஆதரவு அலையைக் குலைப்பதற்காக ...எதாவ‌து ஒரு இறந்த உட‌லை பிர‌பாக‌ர‌ன் உட‌ல்தான் என்றூ சிங்க‌ளக் காடைய‌ர்க‌ள் பொய் சொல்ல‌லாம்.

பிர‌பாக‌ர‌ன் என்ன‌ முடிவுக்கு ஆளான‌ர் என்ப‌து ஒரு க‌ண்டு பிடிக்க‌ முடியாத‌ ம‌ர்ம‌மாக‌வே போகாலாம்.

இல்லை... இன்னும் சில‌ வ‌ருட‌ங்க‌ளில் மீண்டும் பிர‌பாக‌ர‌ன் எங்கிருந்தாவ‌து வெடித்துக் கிள‌ம்ப‌லாம். அல்ல‌து ... ம‌ன‌ம் நிறைய‌ சோக‌ங்க‌ளோடு மீண்டும் ஒரு த‌லைமுறைக்கு விடுதலைப் போராட்ட‌ உணர்வை ஏற்படுத்த , நூறாண்டுகள் வாழலாம் .(தமிழ் நாட்டை மட்டும் எதற்கும் நம்பாதீங்க என்று சொல்வாரோ?)

பிரபாகரன் மரணம் அடைந்தது நாளையே உறுதியாகலாம்.

அல்லது இன்னும் முப்ப‌து வ‌ருட‌ம் க‌ழித்து பிர‌பாக‌ர‌ன் ம‌ர‌ண‌ம் ப‌ற்றிய‌ ப‌ர‌ப‌ர‌ப்பான‌ செய்தி வ‌ர‌லாம்

ஆக , பிரபாகரன் இன்னொரு நேதாஜி. சொல்லப் போனால் பல விதங்களில் பிரபாகரன் சந்தித்த துரோகங்களை நேதாஜி சந்தித்ததில்லை. நேதாஜி ஏழு நாட்டு ராணுவத்தை எதிர்த்துப் போராடவில்லை. சொந்த இனமே நேதாஜியைக் கழுத்தறுக்கவில்லை.அந்த விதங்களில் பிரபாகரன் நேதாஜியை விட மேல்.

நேதாஜியைத்தான் தனது விடுதலைப் போராட்ட குருவாகக் கொண்டிருந்தார் பிரபாகரன்.இன்று தானும் ஒரு நேதாஜி என்றாகி விட்டார். அன்று நேதாஜி உருவாக முக்கியக் காரணம் அன்றூ அவரைத் தமிழர்கள் ஆதரித்தது.அது நடக்கா விட்டால் நேதாஜிக்கு இவ்வளவு பெருமையும் இல்லை. நேதாஜியைக் காரணம் காட்டி வங்காளிகள் இந்திய அரசுகளில் இன்று அடைந்துள்ள முக்கியத்துவத்தை அடைந்து இருக்கவும் முடியாது.

ஆனால் நன்றி கெட்ட அந்த வங்காளிகள்தான் சிங்களவனுக்கு ஆதரவாக ராஜிவ் காந்தியைத் திருப்பியவர்கள்.ம‌த்திய‌ அர‌சுக‌ளை மாற்றிய‌வ‌ர்க‌ள்.துணை போன‌து த‌மிழ‌னுக்குத் த‌மிழ் உண‌ர்வு வ‌ந்துவிட்டால் அப்புற‌ம் த‌மிழ் நாட்டில் த‌மிழ‌னையே சுரண்டிப் பிழைக்க முடியாது என்று பயந்த மலையாளிகள் .

இந்த தலைமுறையில் தமிழ் உணர்வுள்ள தமிழர்களுக்கு ஒரு அவமானமும் துக்கமும் உண்டு .

நம் தலைமுறையில் ஈழ விடுதலைப் போராட்டம் குலைந்ததும் அதற்கு காசுக்கு ஓட்டுப் போட்ட தமிழனும் ஒரு காரணம் என்பது அவமானம் .

பிரபாகரன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது தலையாய பெருமை.

Saturday, May 16, 2009

ஏன் தோல்வி? எப்ப‌டி வெற்றி??

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் பெற்றி தோல்விக்கான காரண காரியங்களைச் சொல்வது ஒன்றும் பெரிய விசயமில்லை என்பது உண்மைதான்.ஆனால் சொல்ல வேண்டியது அவசியம் என்பதும் உண்மைதான்.
அ.தி.மு.க அணி தோற்கக் காரணங்கள்:**************************
1)இன நலம் , சமூக நலம், பொது நலம் இல்லாத ...ஆக்க பூர்வமான சுய நலம் கூடப் பார்க்கத் தெரியாத ...தற்காலிக அற்ப சந்தோஷம் தருகிற சில நூறு ருபாய்த் தாள்களில் தன்னைத் தொலைத்து விடுகிற ஒரு தரப்பு மக்களின்வெட்கங் கெட்ட நாலந்தர சுய நலம்.
2)முடிவுகளைத் தீர்மானிக்கிற மக்களின் மன நிலையைக் கூட கடைசி நேரத்தில் மாற்றுகிற ... நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட கலைஞர் கருணாநிதியின் தேர்தல் காலத் தந்திரங்க‌ளும் வாக்குப் பதிவு நேரச் செயல்பாடுகளும்.
3)ரொம்ப‌ கால‌மாக‌ ஈழ‌ ம‌க்க‌ளுக்கு எதிராக‌வே செய‌ல் ப‌ட்டுவிட்டு க‌டைசி நேர‌த்தில் த‌னி ஈழ‌ ஆதர‌வை மிக‌வும் உர‌த்து முழ‌ங்கிய‌தால் ஜெயலலிதா மீது ம‌க்களுக்கு ஏற்ப‌ட்ட‌ ந‌ம்ப‌க‌மின்மை.(ம‌ற்ற‌ப‌டி ஈழ‌ ஆத‌ர‌வு அலையே இல்லை என்ப‌தை ஒத்துக் கொள்ள‌ முடியாது)
4)கூட்ட‌ணிக் க‌ட்சித் த‌லைவ‌ர்க‌ளோடு ஒரு மேடையில் கூட‌ ஜெய‌ல‌லிதா ஒன்றாக‌த் தோன்றி ம‌க்க‌ளுக்கு ம‌க்க‌ள் ம‌ன‌தில் ஒரு இண‌க்க‌ உண‌ர்வை ஏற்ப‌டுத்தாத‌து.
5)வைகோவை ஜெய‌ல‌லிதா க‌டைசி வ‌ரை முழுமையாக‌ அங்கீக‌ரித்து ஈழ‌ ஆத‌ர‌வுக் குர‌லை ம‌க்க‌ள் மக்க‌ள் ந‌ம்பும் வ‌கையில் முழுமைப் ப‌டுத்திக் கொள்ளாத‌து.
6)காங்கிர‌சிட‌ம் பொட்டி வாங்கிக் கொண்ட விஜயகாந்த் அதற்குப் பிரதி பலனாக‌ தீவிரப் பிர‌ச்சார‌ம் செய்து ஆளுங்க‌ட்சிக்கு எதிரான‌ ம‌ன‌ நிலையுள்ள மக்களின் வாக்குக‌ளில் ஒரு ப‌குதியைப் பிரித்து வீணாக்கிய‌து.(உதார‌ண‌ம் வைகோவின் தோல்வி)
7)க‌டைசி தின‌ம் வ‌ரை பா.ம‌.க‌. ம‌த்திய‌ ஆட்சியில் அங்க‌ம் வ‌கித்த‌தை ம‌க்க‌ள் அவ்வ‌ள‌வாக‌ ர‌சிக்காத‌து.
8)வாராது வ‌ந்த‌ மாம‌ணி போல‌ கோர்ட் அனும‌தி வ‌ழ‌ங்கிய‌ ஈழ‌ ஆத‌ர‌வு வீடியோக்க‌ளின் ஒளிப‌ர‌ப்பை ம‌க்க‌ள் டி.வி.ம‌ட்டும் ஒளிப‌ர‌ப்ப‌ ஜெயா‌ டி.வி. தானும் அதைச் செய்து ம‌க்க‌ள் மத்தியில் உண‌ர்வு அலையை எழுப்ப‌த் த‌வ‌றிய‌து. அத‌ன் ஒளிப‌ர‌ப்பை காவ‌ல்துறை த‌டுத்த‌ போது ஜெயலலிதா அதை மக்கள் மன்றத்துக்கு வலுவோடு கொண்டு போகத் தவறியது.
9)ஓட்டுப் ப‌திவுக்கு முன்பே ,ஜெயித்து முடித்துவிட்ட‌ மித‌ப்பில் ஜெய‌ல‌லிதா காட்டிய கடைசி கட்ட ‌அல‌ட்சிய‌ம்.தொண்டர்க‌ளும் கடைசி நேர‌த்தில் ஓய்ந்து விட்ட‌து
10)தேர்த‌ல் பிர‌ச்சார‌ ச‌ம‌ய‌த்தில் கூட‌ ஒழுங்காக‌ ப‌ண‌ம் செல‌வழிக்காம‌ல் தொண்ட‌ர்க‌ளை அதிமுக‌ க‌றும்புள்ளிக‌ள் காய‌ விட்ட‌து.
எப்ப‌டி வென்றது தி.மு.க‌. அணி??************************
என் பணம் பண‌ம் ...உன் ப‌ண‌ம் ப‌ண‌ம் ...உன் ப‌ணம் , என் ப‌ண‌ம்! உன் ப‌ணம் ப‌ண‌ம் ...என் ப‌ணம் ப‌ணம் ...என் ப‌ணம்,என் ப‌ண‌ம்!(பொறூமையாக‌ ஊன்றிப் ப‌டித்தால் உள்ளர்த்த‌ம் புரியும்)

Friday, May 15, 2009

ஜெயலலிதாவின் தமிழ் ஈழம் !!!!????!!!!?!?!?!?

"அவ்வளவு நம்பிக்கையா?" என்றூம் ..." இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே..." என்றும் என்னைப் பார்த்து உச்சுக் கொட்டுவது எனக்கு நன்றாகவே புரிகிறது.அதனால்தான் தலைப்பிலேயே அத்தனை !களும்,?களும் முன் ஜாக்கிரதையாகவேபோட்டு விட்டேன்.நான் கொஞ்சம் விவரமாக்கும்.
"தமிழ் ஈழம் பெற்றுத் தருவேன் " என்று ஜெயலலிதா, உண்மை உணர்வோடு சொன்னாரோ இல்லை முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்துக்காகச் சொன்னாரோ... அது வேறு விசயம்.ஆனால் தேர்தலை முன்னிறுத்திக் கூட அதைச் சொல்ல மற்றவர்கள் தயார் இல்லை என்பதை அறியும்போது ஜெயலைதாவுக்கு கண்ணை முடிக் கொண்டு 10 மார்க் அதிகம் போடுவதைத் தவிர வேறு வழியில்லை.(ஜெயலலிதா 32 பொதுக் கூட்டங்களில் தமிழ் ஈழம் என்று முழங்கிய பிறகு கருணாநிதி வேறு போக்கிடம் இல்லாமல் " மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தமிழ் ஈழம் அமைக்கப் போராடிக் கொண்டு இருக்கிறேன் " என்று கூறியது எல்லாம்..செல்லாது !செல்லாது!! இந்த அறிக்கை பற்றி என் நண்பர் ரவி சொன்ன கோபமான பதிலை இங்கு எழுதினால் எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொள்ள வேண்டி வரும். ஆம்! மூக்கைதான்)
ஒரு வருடம் முன்பு வரை கூட தமிழ் ஈழம் அமைப்பது என்பது எளிய வேலையாகத்தான் இருந்திருக்கும்.அதை மேலும் மேலும் சிக்கலாக்கியது சோனியாவும் கலைஞரும்தான்.
இலங்கைக்கு சீனா உதவுவதில் ஒரு பொதுத் தந்திரம் உண்டு.இலங்கையில் தமிழினம் மொத்தமும் அழிந்தால் இந்தியாவுக்கும் இலைங்கைக்குமான நேரடி உறவு அழிந்துவிடும்.தமிழகத்தை நேசிக்கிற யாரும் இலங்கையில் இல்லை என்றால் இந்தியாவின் இலங்கைப் பிடி வலுவிழந்து போகும்.‌இல‌ங்கையை முழுக்க‌ முழுக்க‌ சிங்க‌ள‌ நாடாக்கி விட்டால் ... இலங்கை , சீனா இர‌ண்டும் புத்த‌ ம‌த‌ நாடுகள் என்ற வித‌த்தில் இலங்கையில் சீனாவின் ப‌ல‌ம் அதிக‌ரிக்கும்.இன்னொரு முறை இந்தியாவுட‌ன் ச‌ண்டை போடும் சூழ‌ல் வந்தால்வடக்கே சீனாவும் தெற்கே இலங்கையும் சேர்ந்து ஒரே நேரத்தில் இந்தியாவை என்ன சேதி என்று கேட்க முடியும்.ஒரே நேரத்தில் இந்தியாவை வடக்கு , தெற்கு இரன்டு எல்லைகளிலும் நசுக்க முடியும்.
இலங்கைக்கு உதவுவதில் பாகிஸ்தானுக்கும் ஒரு நோக்கம் உண்டு.இந்தியாவின் மூத்த தேசிய இனமான தமிழினத்தின் நீட்சியை இலங்கையில் அழிக்கத் துணை போவதன் மூலம்,இந்திய அரசுக்கு தார்மீகச் சிக்கலை ஏற்படுத்தி ,இந்தியாவில் பிரிவினை உணர்வுகளைத் தூண்டுவதன் மூலம் தீவிரவாதத்தை வளர்க்க முடியும் . இந்தியாவின் இன்னொரு அண்டை நாட்டுக்கு நெருங்கிய நண்பராக ஆவதன் மூலம் , நாளை இந்தியாவுக்கு எதிராக அந்த நாட்டையும் திருப்பிக் கொள்ள மூடீயும். "எங்கள் ஆயுதங்கள் எப்படியெல்லாம் அழிக்கிறது பாருங்கள்" என்று உதாரணம் காட்டி மற்ற நாடுகள் ஆயுத வியாபாரம் செய்ய முடியும்.
இந்தியாவுக்கு.....?
ராஜிவ்காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகள் மட்டுமே காரணம் என்றூ மீண்டும் மீண்டூம் சொல்வதன் மூலம் சதியில் பங்கு பெற்ற அமெரிக்க ஏஜெண்ட் சாமிகளையும் இத்தாலிய மாமி(யார்)களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் .அதற்கு பிரபாகரனைக் கொன்றொழிக்க வேண்டும்.அதில் அப்பாவி மக்கள் செத்தால் என்ன? ஈழத்தமிழினமே அழிந்தால் என்ன? அது எதிர்கால இந்தியாவுக்கு ஆபத்தாக மாறினால் என்ன? ரொம்ப பிரச்னை வந்தால் குடும்பத்தோடு இத்தாலிக்கு விமானம் ஏறி விட்டால் போச்சு
தமிழ்நாடு ஆட்சியாளர்களுக்கு...?
டில்லியில் இருந்து எல்லா வழிகளிலும் 10000 கோடி 20000 கோடி என்று பொட்டி வந்தால் போதும். அவர்கள் இத்தாலிக்கு கிளம்பினால் நாம் அமெரிக்க குடியுரிமை பெற்று ஆபத்துக் காலத்தில் அங்கே போய்விட்டால் போச்சு!
இந்த நிலையில்தான் வாழும்கலை அமைப்பின் தலைவர் ரவிஷங்கர் குருஜியின் பேச்சால் மனம் மாறிய ஜெயலலிதா தமிழ் ஈழம் கோரிக்கையைக் கைக் கொண்டார். அதில் அவர் எந்த அளவுக்கு உண்மையாக‌ இருப்பார்?
தேர்தலில் கிடைத்த தொகுதிகளை வைத்துக் கொண்டு அவர் காங்கிரசுக்கு ஆதரவு தரப் போய்விட்டார் என்றால் ...அப்புறம் அவருக்கும் கருணாநிதிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று ஆகிவிடும்.
பி.ஜே.பி .யுடனோ அல்லது வேறு மாதிரியான ஆட்சியிலோ அவர் முக்கியப் பங்கு எடுத்தால் ... அதன் பின்னரும் அவர் தமிழ் ஈழம் கோரிக்கைக்கு உண்மையாக இருந்தால் அது எப்படிப் பட்ட தமிழ் ஈழமாக இருக்கும்? மிக முக்கியமான கேள்வி இது .
ஜெயலலிதாவுக்கு ஒரு வேளை இந்த நோக்கத்தில் உதவக் கூடீய வாய்ப்பு உள்ள பி.ஜே.பி., இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எல்லா கட்சிகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிரபகரனையும் அங்கீகரிக்கத் தயாராக இல்லை.தடையை நீக்கத் தயாராக இல்லை.தமிழ் உணர்வு பெருகுவதை வட இந்தியர்கள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.அப்புறம் தமிழ் நாட்டிலேயே தமிழனை அடிமைப் படுத்திப் பிழைப்பது கடினம்.
ஜெயலலிதாவும் போராளிகளை ஆதரித்துப் பேசவில்லை.‌
எனவே ஒரு வேளை இலனங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி(!)ஜெயலலிதா(?)தமிழ் ஈழம் வாங்கித்தர முயன்றால் உடனே சிங்களன் தனது புது அப்பனான சீனாவைப் பார்த்து அழுவான்.இந்தியாவுக்கு எதிராக சீனா களம் இறங்கலாம்.மேற்கத்திய நாடுகள் சீனாவுக்கு எதிராக களம் இறங்கலாம்.
"என் தலைவன் முத்தமிழ் அறிஞன் மட்டும் இல்ல.மூன்றாம் உலகப் போர் உருவாகக் காரணமானவனும் கூட " என்று ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு உட‌ன் பிறப்புக்க‌ள் ஈன‌ஸ்வ‌ர‌த்தில் பெருமைப் ப‌ட‌லாம்.
இந்த‌க் கொடுமைகளை எல்லாம் மீறி த‌மிழ் ஈழ‌ம் அமைந்தால் அது பிர‌பாக‌ர‌ன் செய‌ல் ப‌டுத்திக் காட்டிய‌ த‌மிழ் ஈழமாக ,குழந்தைக்குத் தமிழில் பெயர் வைத்தால் வங்கியில் பணப் பரிசு போடுகிறதாக,சாராயம் இல்லாததாக ,முழுமையான தமிழ் தேசமாக,ந‌ள்ளிர‌விலும் பெண்க‌ள் அச்ச‌மின்றிப் ப‌ய‌ணித்த‌ ஈழ‌மாக‌..தூய‌ த‌மிழுக்கு முக்கிய‌த்துவம் தருகிற தேசமாக இருக்க வாய்ப்பு இல்லை. அங்கும் கட்சி வளர்ப்பார் ஜெயலலிதா. அங்கும் ஒரு உடன்பிறவா சகோதரி கிடைக்கலாம். இங்கு நடக்கிற எல்லாக் கூத்துகளும் அங்கும் நடக்கலாம். ஆனாலும்...
இப்போது இலங்கையில் தமிழினம் அனுபவிக்கிற கொடுமைகளைப் பார்க்கிற போது, நம்மைப் போலவே ஈழத் தமிழனும் ஒரு சராசரி வாழ்க்கையாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டும். அந்தப் 'பெருமை' ஜெயலலிதாவுக்குக் கிடைக்கட்டும்.
உண்மையான தமிழ் உணர்வாளர்கள் கனவு கண்ட அற்புதமான தமிழ் ஈழம் கிடைக்காமல் போன பழியை வரலாறு மிகச் சரியாக சோனியா கருணாநிதி இருவரின் பெயரிலும் துரோக வரளாறாகச் செதுக்கி வைக்கட்டும்.

Thursday, May 14, 2009

கண் மூடீக் கொண்ட பூனை --‍‍‍‍‍சோ ராமசமி


வாக்குப் பதிவு நடந்த மே 13ந்தேதி வெளியான குமுதம் இதழில் துக்ளக்(ஆசிரியர்)சோ ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறியுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கருத்து ..."இந்த தேர்தலில் தமிழகத்தில் இலங்கைப் பிரச்னை பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை"
ஆரம்பத்தில் நிறைய பேருக்கு இந்த கருத்து அல்லது பயம் இருந்தது உண்மை.மறுக்கவில்லை.ஆனால் நாளடைவில் மனிதாபிமானிகளும் இன உணர்வு உள்ளவர்களும் நிம்மதிப் பெருமூச்சுவிடும் வகையில் ஈழ விவகாரம் தமிழக தேர்தல் பிரசாரத்தை ஆட்டிப் படைத்தது என்பது எல்லோர்க்கும் தெரிந்த விசயம்.
ஒரு வேளை தேர்தல் அறிவிக்கப் பட்ட ஆரம்பக் கட்டத்தில் சோ இப்படி ஒரு கருத்தைக் கூறி இருந்தால் கூட சரியாகத்தான் கணிக்கிறாரோ என்று நாம் எல்லாரும் தவறாக நினைத்து இருக்கக் கூடும்.
ஆனால் ஈழ‌ப் பிர‌ச்னை த‌மிழ‌க‌ தேர்த‌ல் க‌ள‌த்தை முழுதாக‌ ஆக்கிர‌மித்து விட்ட‌து க‌ண்டு வ‌ட இந்திய‌ அர‌சிய‌ல்வாதிக‌ளே கிடுதாக்கிப் போய் இருந்த‌ நிலையில் வாக்குப் ப‌திவு அன்று வெளியாகிற இத‌ழில் அவ‌ர் இப்ப‌டி ஒரு க‌ருத்தை சொல்லி இருக்கிறார் என்றால் ... அப்புற‌ம் க‌வுண்ட‌ம‌ணி பாணியில் " ரொம்ப‌ நாள் 'உள்ள' இருந்துட்டு வந்தீங்க‌ளா?" என்று கேட்ப‌தைத் தவிர‌‌ வேறு வ‌ழியில்லை.
அவ‌ரது க‌ருத்துக்கு வ‌லு சேர்க்க‌ அவ‌ர் க‌ண்டுபிடித்துச் சொல்லி இருக்கும் கார‌ண‌ம் .. அட‌டா அபார‌ம்! அதாவது ஜெயலலிதா பேசசுகிற கூட்டங்களில் எல்லாம் அவர் பேசத் துவங்குவதற்கு முன்பு ரபி பெர்னார்ட் மக்களிடம் அதிமுகவை ஆதரிப்பதற்கு என்ன காரணம் என்றூ கேள்வி கேட்கிரறாராம்.அதற்கு எல்லாரும் விலைவசி உயர்வு , மின்சாரத் தட்டுப்பாடு போன்றவற்றைத்தான் காரணமாகச் சொல்கிறார்களாம் . யாரும் இலங்கைப் பிரச்னையைக் காரணமாகச் சொல்லவே இல்லையாம்.அதனால்தான் சொல்கிறாராம் .. இந்த தேர்தலில் இலங்கைப் பிரச்னை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையாம். இது எப்படி இருக்கு? சில மாதங்கள் முன்பு வரை ஈழம் என்ற சொல்லையே உச்சரிக்க வெறுத்த-- ஜெயலலிதா ‍‍‍போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது சகஜம்தான் என்று சொன்ன ஜெயலலிதா‍‍ இன்று தனி ஈழ முழக்கத்தில் திளைப்பதைப் பார்த்தாலே புரியும் ஈழப் பிரச்னை எந்த அளவு தமிழக தேர்தல் களத்தைப் பாதித்து உள்ளது என்பதை உணர.
சோ உதாரணம் காட்டிய ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டங்களில் இருந்தே சோவுக்கு நிரூபிக்க முடியும். பொதுவில் வழக்கமாக ... ஜெயலலிதவுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ ... எம்.ஜி.ஆரின் பெயரையும் இரட்டை இலை சின்னம் பற்றியும் ஜெயலலிதா பேசும்பொதுதான் , அதிமுக கூட்டங்களில் அதிக கைத்தட்டலையும் கரகோஷத்தையும் பார்க்க முடியும்.ஆனால் இந்த முறை அந்தப் பெருமை தனி ஈழ ஆதரவுப் பிரகடனத்துக்குப் போய்விட்டது என்ற உண்மை ... வெயிலுக்குப் பயந்து ஏ.ஸி. அறையிலேயே அடைந்து கிடந்ததால் சோவுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.பாவம்.
தேர்தல் களத்தை விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் பாதிக்கவே இல்லை என்று சொன்னால் அப்புறம் சோவுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நமக்கு எதற்கு அந்த கேவலம்? விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் தமிழனின் உணவையும் ஈழக் கொடுமைகளும் அதற்கான இந்தியத் துரோகங்களும் அவன் உணர்வையும் பாதித்தது என்பதே நிஜமான அறிவாளிகளின் சரியான புரிதல்.
அப்படி இருக்க இலங்கைப் பிரச்னை தேர்தல் களத்தில் பாதிப்பை எற்படுத்தவில்லை என்று சோ செருமுவதைப் பார்க்கும்போது அந்தப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.சோ என்ற பூனை கண் மூடிக் கொள்வதால் தமிழகத்தின் தனி ஈழ ஆதரவு என்ற பூலோகம் இருண்டு விடவில்லை.

கமலஹாசனும் நரேஷ்குப்தாவும் என்ன செய்திருக்க வேண்டும்?





மே 13ந்தேதி வாக்குப் ப‌திவு தின‌த்த‌ன்று , தின‌த்த‌ந்தி நாளித‌ழில் க‌ட்ட‌ம் க‌ட்டி வ‌ரும் அள‌வுக்கு க‌ம‌ல்ஹாச‌ன் பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார்.ஜ‌ன‌னாய‌க‌த்தில் த‌னக்கு உள்ள‌ ந‌ம்பிக்கை.... ஓட்டுப் போடுவ‌த‌ன் அவ‌சிய‌ம் குறித்து த‌ன‌து ர‌சிக‌ர்க‌ளுக்குக் கூட‌ அரிவவுறுத்தும் த‌ன‌து சுபாவ‌ம் குறித்து எல்லாம் கமல் குறிப்பிட்டிருந்த அந்த பேட்டியின் சாராம்சம் என்னவென்றால்...
க‌ம‌ல‌ஹாச‌னுக்கு இந்த முறை ஓட்டு இல்லை. அதாவ‌து வாக்காள‌ர் ப‌ட்டிய‌லில் அவ‌ர‌து பெய‌ர் இட‌ம் பெற‌வில்லை. க‌ம‌ல் அது குறித்து கார‌ண‌ம் கேட்ட‌போது , "ப‌ரிசோத‌னைக்கு நாங்க‌ள் வந்த‌போது வீட்டில் உங்க‌ளைப் பார்க்க‌ முடிய‌வில்லை.அத‌னால் உங்க‌ளுக்கு ஓட்டு இல்லை"என்று கூறிவிட்டார்க‌ளாம்.என‌க்கே ஓட்டு இல்லை என்றால் சாத‌ர‌ண‌ ம‌க்க‌ளின் நிலை என்ன‌ என்று க‌ம‌ல் கேள்வி எழுப்பி இருந்தார்.
இது குறித்து ப‌தில் சொன்ன‌ ந‌ரேஷ் குப்தா, க‌ம‌ல‌ஹாச‌னுக்கு எக்மோரிலேயோ எங்கேயோ ஓட்டு உள்ள‌து.அஙே போய் அவ‌ர் போட்டு இருக்க‌லாம் என்று ப‌தில் சொன்னார்.
எந்த‌ குள‌றுப‌டி ந‌ட‌ன்ஹ்டாலும் தேர்த‌ல் க‌மிஷ‌னை தொட‌ர்பு கொள்ள‌லாம் என்று கூறியிருனந்த‌ தேர்த‌ல் க‌மிஷ‌ன் அத‌ற்கான‌ தொலை பேசி எண்க‌ளையும் கொடுத்திருந்த‌து.
வாக்க‌ளிப்ப‌த‌ன் அவ‌சிய‌த்தை உண்மையாக‌ அறிந்த‌வ‌ராக கூறும் க‌ம‌ல் நினைத்தால் ந‌ரேஷ் குப்தாவுட‌ன் கூட‌ எளிதாக‌ பேசி இருக்க முடியும்முடியும் .அப்ப‌டி பேசி , ந‌ரெஷ் குப்தா சொன்ன‌ப‌டி எக்மோருக்கு போய் தான் எப்ப‌டி ஓட்டுப் போடப் போகிறேன் என்பதை என்ப‌தை அவ‌ர் அன்று காலை பேட்டியாக‌ கொடுத்து இருந்தால், அது பாராட்டுக்குரிய‌ விஷ‌ய‌மாக‌ இருந்திருக்கும்.
அது கமலின் அதே சூழலில் இருந்த மற்ற வாக்காளர்களுக்கும் ஒரு உந்து சக்தியாக -பாடமாக இருந்திருக்கும் .எப்படியாவது ஓடு போடப் போராட வேண்டும் என்ற மன நிலையை ஏற்படுத்தி இருக்கும் . ஆனால் க‌ம‌லின் க‌ழிவிர‌க்க‌ப் பேட்டியின் ப‌ல‌ன்? " ந‌ம‌க்கு ம‌ட்டும் இந்த‌ நிலைமை இல்ல‌ப்பா... க‌ம‌லுக்கே இதே நிலைமைதான் , அவ‌ராலேயே முடிய‌ல‌. நாம‌ ம‌ட்டும் என்ன‌ செய்ய‌ முடியும் என்று புல‌ம்பும் நிலையையே ம‌க்க‌ளிட‌ம் உருவாக்கிய‌தை க‌ண்கூடாக‌ப் பார்க்க‌ முடிந்த‌து.
"ஆமா. பெரிய பெரிய அரசியல் தலைவர்களுக்கே அக்கறை இல்ல.‌க‌ம‌லிட‌ம் இந்த‌ அள‌வு எதிர்பார்க்க‌ வேண்டுமா" என்றூ கேட்கலாம் .கமல் ஒன்றும் சாதரண‌ நடிகர் அல்லவே.‌ த‌மிழ் ந‌டிக‌ர்க‌ளிலேயே அதிக‌ ச‌மூக‌ அக்கறையுள்ள‌ ஒரு சில‌ரில் ஒருவ‌ராக‌ வெளிப் ப‌டுத்த‌ப் ப‌டும் க‌ம‌லிட‌ம் இதை எதிர்பார்ப்ப‌தில் த‌வ‌று இல்லையே.
ச‌ரி...க‌ம‌ல‌ஹாச‌னையே க‌ண்டு பிடிக்க‌ முடியாத‌ ‍ அவ‌ர‌து பெய‌ரையே வாகாளர் ப‌ட்டிய‌லில் சேர்க்க‌ முடியாத‌ 'க‌ட‌மை உண‌ர்ச்சி மிக்க‌' ந‌ம‌து தேர்த‌ல் அலுவ‌ல‌ர்க‌ள்,வாட‌கை வீட்டில் குடியிருந்த‌ப‌டி வ‌ருடத்துக்கு இர‌ண்டு முறை வீடு மாறும் சாத‌ர‌ண‌ ம‌க்க‌ளுக்கு எப்ப‌டி உண்மையாக‌ இருக்க‌ப் போகிறார்க‌ள்? "நாங்க‌ள் போன‌போது க‌ம‌ல் வீட்டில் இல்லாத‌தால் அவ‌ர‌து பெய‌ரை அங இட‌ம் பெற‌ச் செய்ய‌ முடிய‌வில்லை "என்று கூறிய‌ அதிகாரியை நரேஷ் குப்தா க‌ண்டித்திருக்க‌ வேண்டாமா?
அதோடு முடிந்த‌தா? " வாக்காள‌ர் ப‌ட்டிய‌லில் தங்க‌ள் பெய‌ர் உள்ள‌தா என்று ம‌க்கள் ச‌ரி பார்க்காத‌ அலட்சியத்தின் விளைவுதன் இந்த‌ நிலை என்று ம‌க்க‌ளுக்கு அறிவுரைக‌ள் வேறு.
அர‌சிய‌ல்வாதிகள் ப‌ண்ணுகிற‌ கூத்தில் ஓட்டுப் போடுவ‌தே வெட்டி வேலை என்று ம‌க்கள் விர‌க்திய‌டைகிற‌ சூழ‌லில் ஆர்வ‌த்தோடு ஓடிப் போய் வாக்காள‌‌ர் ப‌ட்டிய‌லை ச‌ரி பார்க்கிற நிலையில‌ ம‌க்க‌ள் இருக்கிறார்க‌ள்?
ஓரிர‌ண்டு பெய‌ர் விட்டுப் போவ‌தே பெரிய‌ த‌வ‌றுதான் . அப்படி இருக்க‌ ப‌ல‌ ஊர்க‌ளில் கும்ப‌ல் கும்ப‌லாக‌ 200 ... 300 ...பெய‌ர் விட்டுப் போன‌து கூட‌ ம‌க்க‌ளின் அல‌ட்சிய‌ம் தான் என்று நரேஷ் குப்தா சொல்வாரா‌?
வாக்காள‌ர் ப‌ட்டியலில் த‌ங்க‌ள் பெய‌ர் இருக்கிறதா‌ என்று ம‌க்க‌ள்தான் க‌வ‌னித்து கொள்ள‌ வேண்டும் என்ற வாத‌மே த‌வறான‌து . அது ச‌ம்ப‌ளம் வாங்கிக் கொண்டு வேலை செய்கிற‌ அதிகாரிக‌ள் செய்ய‌ வேண்டும் . முறைப்ப‌டி அத‌ற்கு இனி தேர்த‌ல் க‌மிஷ‌ன‌ர்க‌ள் ஏற்பாடு செய்ய‌ட்டும் .
தேர்த‌ல் க‌மிஷ‌ன‌ர் நவீன் சாவ்லலா ம‌ட்டும் ஓட்டு இல்லாவிட்டாலும் ஓட்டுப் போட்டுவிட்டுப் போவார்.ஆனால் அதிகாரிக‌ள் செய்கிற‌ த‌வ‌றுக‌ளுக்காக‌ ம‌க்க‌ள் ம‌ட்டும் அடையாள‌ அட்டை இருந்தும் ஓட்டு போடாம‌ல் புல‌ம்பி விட்டுப் போய்விட‌ வேன்டுமா‌?
எந்த‌ ஊர் நியாய‌ம் இது?